Monday, September 29, 2008

அலையும் கரையும்




நீலக் கடலின்
நித்திய அலைகளின்
சத்தம் கேட்டே
நித்தம் திரும்பும்
விரும்பிய அலைகள்.

வாய்வரை வந்த
வார்த்தை உதட்டோடு
ஒளிந்ததால் ஊமையாகி
நிற்கும் அலைகள்.
சொல்ல முடியாமல்
மெல்லமாய் திரும்பும்.

காதல் மொழி
கேட்பதற்கே காதை
வைத்திருக்கும் கரைகள்
அலைகளின் பிரிவால்
அழுது நிற்கும்.

பரிசாய் அலைகள்
தந்த ஈரத்தை
மட்டும் இதயத்துள்
தாங்கி காத்திருக்கும்
கரைகள்.

காதலை சொல்லி
விடுவோம் என்ற
நம்பிக்கையில் அலையும்,
கேட்டுவிடுவோம் என்ற
நம்பிக்கையில் கரையும்......

காதல் முடிவதில்லை.

No comments: