Wednesday, June 11, 2008

வந்துவிடு

எச்சில் முத்தம் பிச்சையாய் இட்டு
என் இதய பாத்திரத்தை நிரப்பிவிடு.
இச்சை தீர என்னை நேசித்து
இதழ்கலாள் இதயத்தை ஈரப்படுத்து.

உறக்கம் இன்றி உதிர்ந்த இரவுகளை
சேகரித்து என்னிடம் சேர்க்க வந்துவிடு
கண்ணீரால் குளித்த என் விழிகளை
உன் புன்னகையால் துவட்டி தந்துவிடு.

உன் இமைகளை என் கண்களாய்
இடம் பெயர்த்து இரவுகளை நீள விடு.
திசுக்களை எல்லாம் பொசுக்கி என்
நாடி நரம்புகளில் தாளமிடு.

பார்வையின் பதிப்பில் வார்த்தைகள்
மரணித்துதால் மௌனத்தால் பேசிவிடு.
நாணம் கொண்டு நிலம் நோக்கையில்
உன் கூந்தல் வாசம் வீசிவிடு.

விடுமுறை தினங்களில் உன் சிகைதனை
சீவி விடும் சிற்றின்பம் தந்துவிடு.
சோகத்தில் நான் வேகும் காலத்தில்
உன் மென்கரத்தால் என்னை தாங்கி விடு.

உன் நிழல் எப்போதும் என்மீது
விழுந்து கிடந்து வாழட்டும்.
உன்னை பிரிந்து ஒருநாள் இருந்தாலும்
உயிர் ரணமாகி சாகட்டும்.

உன் ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம்
சொல்லி கொடுத்து அகராதி எழுதவிடு.
ஒரு சிசுவாய் என்னை நெஞ்சொடு வாரி
அணைத்து கேட்காத தாலாட்டை கேட்க விடு.

அறுபது வயது ஆனாலும் உன்
அருகாமையில் என்னை நனைத்து விடு.
அன்பே நான் பிரிய நேர்ந்தாலும்
ஒரேஒரு கணம் என்னை நினைத்துவிடு.

வள்ளுவம் கூறிய இல்லறம் நாம்
வையத்தில் புரியும் வரம் வேண்டும்.
மனிதராய் பிறந்த அன்றில் நாம்
என்று அகிலம் அறிய வேண்டும்.

No comments: