சூரியன் வானில்
எரியும் போது,
மெழுகு வர்த்தியின்
உதவியை நாடுபவனே!
உலகமே உனக்காக
இருக்க,
நீயோ வட்டத்திற்குள்
வாழ்கிறாய்.
சோகத்தால் போசுங்கியவனே
சொர்க்கம் நமக்காக.
நம்பிக்கை என்னும்
அணுவில் தான்
வெற்றியின் சக்தி
புதைந்துள்ளது.
துவண்டு அழுதது
போதும்!
தோண்டி எடுக்க
துணி.
இறந்து பிறப்பதை
விட,
பிறந்து இறப்பது
மேல்.
அதனால் நண்பனே!
கனவினை கருவில்
கலைக்காதே!
அவை வளரட்டும்.
ஒன்றாவது உருபெரும்.
தோல்வி மூட்டைகளை
சுமந்து
நம்பிக்கை முதுகு
குனிந்தவனே
வியர்வை அரும்புகள்
வெற்றி பூக்கக்கள்
ஆகும் காலம்
வெகுதொலைவில் இல்லை.
நடக்க நடக்க
தான் புதரில்
பாதை தோன்றும்.
நீ தோற்க
தோற்க்கதான்,
வெற்றியின் வழி
தென்படும்.
தளராதே!
நம்பிக்கையோடு எழு.
உன்னால் எல்லாம்
முடியும்.
உன்னால் மட்டுமே
உலகம் விடியும்.
தீயவை அனைத்தும்
மடியும்.
ஓடு ஓடு உலகின்
விட்டத்தின் இறுதி
புள்ளி வரை ஓடு.
தடைகளை இடி.
வெற்றியை பிடி.
வாழ்வில் நோக்கத்தை
தேடு.
என்றும் ஆக்கதையே
நாடு.
உலகை உயர்த்த
வந்த உத்தமர்ககளுள்
நீயும் ஒருவன்.
உண்மையை மறந்து
விடாதே.
உனக்குள் இருக்கும்
உன்னை உயிர்ப்பித்து
கொண்டு வா.
அற்ப பதர்களோடு
ஒப்பிட்டு உன்னை
நீயே தாழ்த்தி
கொள்ளாதே.
எரிகின்ற ஞாயிறின்
தழல் நீ.
விரிகின்ற வானின்
நிழல் நீ.
உன் திறமைகள்
நீ அறிவாய்.
உலகம் அறிய
உயிர்த்தெழுவாய்.
நீ தொடுவதற்கு
தான் வெற்றி
சிகரங்கள் தவம்
கிடக்கின்றன.
விழுந்தாலும்
வீறு கொண்டு
வா.
நீ வரும் நாள்
வெகுதூரத்தில் இல்லை.
No comments:
Post a Comment