Thursday, June 19, 2008

நான்..

ஓரிடத்தில் நில்லாது
யாரிடத்திலும் சொல்லாது
ஓயாது செல்லும்
நானொரு வழிபொக்கன்.

ஆதி அறியாது
அந்தம் தெரியாது
அமைதியாய் மறையும்
நானொரு வழிபோக்கன்.

காத்திருந்து கவலைகளை
பரிசாக பெறுதலும்
எதிர்பார்த்து ஏமாந்து
போதலுமென் பொழுதுபோக்கு.

என் பாதைகள்
கற்களும் முள்களுமாய்.
என் பயணங்கள்
இரத்தமும் சதையுமாய்.
விடை தெரியாத
இந்த பயணத்தில்
விடுகதையாய் மரிக்கின்றேன்.

அடிபட்டே அலுத்துபோன
இதயம் இப்போதும்
வலியை தாங்க
தயாராய்.

நேசத்தை நெஞ்சோடு
விதைத்து துயரை
அறுவடை செய்யும்
அதிர்ஷ்டசாலி நான்.

அழுதே பழகிபோன
விழிகளுக்கு இனிமேல்தான்
சிரிப்பது எப்படி
என நடிக்க கற்று
தரவேண்டும்.

நிழலுக்காக நான்
மரங்களின் ஓரங்களில்
ஒதுங்கிய போதெல்லாம்
பரிசாக கிடைத்ததோ
பறவையின் எச்சங்கள்.

இதோ இன்றும்
தனியாய் நடந்து
கொண்டே.............

No comments: