இரவென்னும் கவிஞன்
வான தாரகையின்
மேனியில் எழுதிய
கவிதைதான் நிலவோ!
வான மங்கையின்
கரிய கூந்தலில்
சூரிய காதலன்
சூடிய மலரோ!
மாதம் ஒருமுறை
மறைந்து போகும்
மழை துளியோ!
மொழிபிழையோ!
குளிரும் பந்தில்
ஒளிரும் மின்மினியை
ஒளித்து வைத்த
விந்தை தானோ!
மழலையென என்
மடியில் தவழும்
காதல் தேவதையின்
கனவு திலகமோ!
மேகப் போர்வைக்குள்
முகம் புதைத்து
நாணம் கொள்ளும்
ஞான விளக்கோ!
நீ ஓவியமோ
நிழல் காவியமோ
உயிர் தோரணமோ
உடல் தேன்மழையோ
சொல்லடி நிலவே
நீ யாரடி.
No comments:
Post a Comment