மழை பொழியும்
மந்தார பொழுதுகளில்
நனைவது மண் மட்டுமல்ல.
மண்ணோடு மனமும் தான்.
தலைமீது குதித்து
துணிகளை நனைத்து
துள்ளி ஓடும்
மழைதுளிகள் காண்கையில்
பின்னால் இருந்து
கண்ணை மூடும்
பிள்ளைகளின் ஞாபகம்.
வானம் நோக்கிப்
பார்த்து வாய்
திறந்து மழைநீர்
பருகும் வேளைகளில்
அமுதம் உண்ட
அனுபவம்.
ஜன்னல் வழியே வரும்
சாரலில் ஆயிரம்
பூக்கள் தேனைத்
தெளிப்பது போலோர்
பிரமிப்பு.
போர்வைக்குள் முகம்
புதைத்து தூங்கினாலும்
தட்டி எழுப்பும்
இடி ஓலியில்
தாயின் அதட்டல்.
பட்டுபோன ரோஜாசெடி
மழை உண்டு மொட்டு
விடுகையில் நிறைவேறா
கனவுகள் நிகழ்ந்த
உணர்வு.
இரைச்சலோடு பெய்யும்
மழையின் ஓசையில்
தங்கைகள் வீட்டில்
அடிக்கும் அரட்டையின்
சாயல்.
இவை எல்லாம்
இதயத்தில் இன்றும்
இதமாய் இனிக்கிறது.
No comments:
Post a Comment