தன்னம்பிக்கை
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.
ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்
அதனால் தான்
நீ தலை.
உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.
நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.
சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.
துடிப்பு ஆனா நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடி ப்பாய்
கொண்டாய்.
நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.
உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.
நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.
நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.
யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.
ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.
நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.
உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.
நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படை யிலும்
சிறந்தாய்.
வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.
நீ துவண்டு
விடாத வீர
களிறு.
வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தளபதிகள்
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!
3 comments:
நீங்கள் ஒருவரது ரசிகன் என்றால் அவரை மட்டும் வாழ்த்துங்கள் போற்றுங்கள் உற்சாக படுத்துங்கள் ஆனால் மற்றவரை புண்படுத்தாதீர் கள்
I haven't wrote anything to hurt others.If so, I will correct my self
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தளபதிகள்
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!
these words saying about someone..
Post a Comment