முதன் முதலாய்
என் தாயின்
கரம் பிடித்து
நானும்,
உன் தந்தையின்
தோளில் சாய்ந்த படி
நீயும் பள்ளி
சேர்க்கையில் அறிமுகம்
ஆனோம்.
ஒற்றை பின்னலும்,
தெற்று பல்லுமாய்,
சிரித்து விட்டு
போகும் உன் கண்கள்
இன்னும் இதயத்தில்.
முதல் முதலில்
அ எழுத
ஆசிரியை சொல்லி
கொடுக்க,
நீயோ அம்மா
என அழுத படி
கிடக்க,
அமைதியாய் உன்
அருகில் வந்து
நீட்டினேன் சில
ஆரஞ்சு மிட்டாய்களை.
நீயோ வாஞ்சையோடு
வாங்கி கொண்டாய்.
முதன் முதலாய்
நமக்குள் துளிர்க்க
ஆரம்பித்து இருந்தது
ஸ்னேகித செடி.
முதல் நாளில்
அழுகை மூஞ்சியாய்
தெரிந்த நீ,
பிறகு வாயாடி
ஆகி போனாய்.
தினமும் நீ
எனக்காக எடுத்து
வந்த நெல்லிக்காய்,
மாம்பிஞ்சுகள்,
கடலை மிட்டாய்.
இன்று நினைத்தாலும்
பசி ஆறிவிடுகிறது.
என் பிறந்த
நாள் அன்று நான்
அணிந்து வந்த
சட்டையை தொட்டு
பார்த்து ”நல்லா இருக்குடா”
என்றாய்.
அதில் இருந்து
எல்லா விடுமுறையிலும்
அதையே அணிய
ஆரம்பித்தேன்.
”என் ப்ரெண்ட்
தான் பா ஃபர்ஸ்ட் ரங்க்”
என நீ வீட்டில்
பெருமை அடித்து
கொள்வாயே.
இப்போது என்
வெற்றியை உணர
கூட யாருமில்லை.
ஊமைக்கு கூட
உன்னோடு பேச
பிடிக்கும்.
நீ வானுலகில்
இருந்து நட்பினை
சுமந்து வந்த
தேவதை.
உன் மனம்
உணருமோ!
நான் இன்று
நட்பில்லாமல்
சாவதை!
நம் ஐந்தாம்
வகுப்பின் முடிவில்
பள்ளிக்கு அருகில்
இருந்த மணல்
மேட்டில் அமர்ந்து
கொண்டு இருந்தாய்!
”நான் நகரத்தில்
வேற பள்ளி
கூடத்தில் சேருகிறேன்”
என நான் சொன்ன
போது நனைந்து
இருந்தன நம்
நான்கு கண்கள்.
இறுதியாய் உன்னை
கண்டது அப்போது
தான்.
காலத்தில் ஓட்டத்தில்
உன்னை தொலைத்து
விட்டேன்.
இப்போதும் ஊருக்கு
செல்லும் போதெல்லாம்
உன் கண்ணீரால்
நனைத்த அந்த
மணல் மேடூகளை
நான் நானைக்க
மறப்பதில்லை
என் கண்ணீரால்.....
No comments:
Post a Comment