கல் தோன்றி
மண் தோன்றா
காலம் முதல்
வல்லினம் ஆக இருந்து
வந்த “க ச ட த ப ற”
உன் இதழ்
வழி வருகையில்
மெல்லினம் ஆகி
நிற்கிறது.
தமிழே அவளை
கண்டு உனக்கும்
தடுமாற்றமா?
துணையாக நீ
வர கடவுளை
வேண்டி விரதம்
இருக்கும் நாள்களில்
பசிக்கு கூட
ருசி இருப்பது
புரிந்தது.
நீ வானவில்லில்
சேராத எட்டாம்
நிறம்.
நீ வந்து
சேராவிடில்
நானோ பட்ட
மரம்.
உண்மையில் நானோ
சிறகு ஒடிந்த
ஒரு பட்டாம்
பூசி.
என்னை சிறையில்
அடைத்து
ஏனடி கண்ணா
மூச்சி.?
No comments:
Post a Comment