மழை காலத்தில்
வெளியில் வந்து
விடாதே.
மழை துளி
மண்ணை விட்டு
விட்டு உன்
மடியில் விழும்.
கோவிலுக்கு மறந்தும்
சென்று விடாதே
தெய்வத்தை விட்டு
விட்டு கூட்டம்
உன்னை தொழும்.
மீன் என எண்ணி
கொக்குகள் உன்
கண்களை கொததி
தின்ன நேரலாம்.
கொக்குகளை கண்டால்
கண்ணை மூடி கொள்.
உதிரம் தோய்ந்த
உன் அதரம்
கண்டு செவ்வானம்
வெட்கப்படும்.
மாலை வேளையில்
சிரித்து விடாதே.
இயற்கையை பழித்திட
பிறந்தவள் நீயா?
என் இதயத்தில்
வாழும் நீ
தேவதையின் சேயா?
2 comments:
Nice lines
Thanks Ramesh
Post a Comment