Tuesday, May 27, 2008

எப்படி புரியும்?

கிடைத்ததை பெற்று
கொள்ள வாழ்க்கை
ஒன்றும் பிச்சை
இல்லை.

அன்பே எனக்கு
கிடைக்காமல்
போய் விடாதே.

அட்சய பாத்திரம்
பிச்சை எடுத்தால்
அகிலம் தாங்காது.

உன் காதலை
நீயே தந்து
விடு.

உன் இமை
விடியளுக்கு
காத்து இருந்து
அஸ்தமனம் ஆனவன்
நானடி.

உனக்காக உயிரையே
தருவேன் என
தெரிந்தும் தயக்கம்
ஏனடி?

உனக்கே புரியாவிட்டால்
உலகுக்கு எப்படி
புரியும்?

நீதான் என்
உலகம் என்று.

No comments: