எனக்கும் இந்த
உலகத்திற்கும் ஆன
உறவு உன்னை
பார்த்த பின்பு
தான் தொடங்கியது.
முதன் முதலாய்
பூவின் வாசம்
நுகர வைத்தாய்.
முட்களை கூட
ரசிக்க வைத்தாய்.
இதயம் போலதான்
உன் நினைவுகளும்.
நான் கவனிக்கா
விட்டாலும்.
எனக்குள் துடித்து
கொண்டே இருக்கிறது.
உன் நினைவு
என்னும் போதி
மரத்தின் கீழ்
தான் நான்
ஞானம் பெற்றேன்.
எனக்கென தனி
உலகம் கொடுத்தது
நீ தான்.
புழுவும்
புழுதியும்
படிந்து கிடக்கிறது
உன்னை தாலாட்டிய
என் கவிதை
புத்தகம்.
காற்றில் அதன்
காகிதங்கள் திறக்கும்
போதெல்லாம் உன்
வியர்வையின் வாசம்
என்னை குளிப்பாட்டுகிறது.
அஞ்சன வண்ண
கூந்தலும்,
இருவிழி என்னும்
காந்தமும்,
என் மூளைக்குள்
வேள்வி நடத்தி
போகின்றன.
எனக்கென எதுவுமே
இல்லையடி.
நீ விட்டு
போன நினைவுகளையும்.
பட்டு போன
என் பருவத்தையும்
தவிர
எனக்கென எதுவுமே
இல்லையடி.
No comments:
Post a Comment