Tuesday, May 27, 2008

இலக்கணம்

வானவில் துண்டு
துண்டாய் உடைந்ததை
முதன் முதலாய்
பார்த்தேன்.
உன் வளையல்கள்
உடையும் போது.

தங்க கொலுஸுகள்
உன் பாதததோடு
என்ன பேசி
கொண்டு வருகின்றன?

காலை தழுவும்
பாக்கியம்
கழுத்தை தழுவ
கிடைக்கவில்லை
என புலம்புகிறதோ?

காற்றை கூட
ஏனடி தண்ிக்கிறாய்?

புல்லாங்குழல் என
நினைத்து
உன் நாசி
துளையில் நுழைந்து
ஏமாந்து போகின்றது.

நீ இலக்கணம்
மீறிய இலக்கியம்.
உன்னை முழுவதும்
படித்தால் ஏறி டும்
தலை கணம்

No comments: