Tuesday, May 27, 2008

காதலின் காதலி

நீ ஒருநாள்
தீபம் ஏற்ற
கோவிலுக்கு
வந்தாய்.
விளக்குகள் துள்ளி
குதித்தன
வெண்ணிலாவை கண்டு
விட்டோம் என..

வானம் மண்ணை
கண்டு பொறாமை
படுகிறது.
உன்னையும் உன்
நிழலையும்
தாங்கும் வாய்ப்பு
மறுக்க
பட்டதற்காக.

தமிழில் எதை
வேண்டுமானாலும் படி!
கவிதைகளை தவிர.
ஏனெனில் கவிதையே
கவிதையை படிப்பதை
யாரும் அனுமதிப்பது
இல்லை.

என் மார்பில்
ஒருநாள் சாய்ந்து
பேசி கொண்டே
இருந்தாய்.
"கனக்கவில்லையா என்று
அக்கறையோடு கேட்டாய்“
நானோ
"நீ எழுந்து
விடாதே!
கனத்து விடும்
என்றேன்“

நீயோ வாசலில்
கோலம் போடுகிறாய்.
கோலங்களோ உன்
கைப்பட்ட இறுமாப்பில்
வானை பார்த்து
சிரிக்கின்றன.
வானமோ வயிற்றெரிச்சலில்
மழையை விட்டு
கோலத்தை
கலைக்கிறது.

மழை பெய்யும்
போது குடையை
விரித்து விடாதே.
அது பூமிக்கு
வருவதே உன்னை
தொட்டு போகும்
ஆசையில் தான்

No comments: