Tuesday, May 27, 2008

நீ

என் நிழலை
கூட சிரிக்க
வைத்தவள் நீ.

என் மரங்களை
எல்லாம் பூக்க
செய்தவள் நீ.

பட்ட மரமாய்
இருந்தவனை
பசுமை வனமாய்
மாற்றியவளும்
நீயே தான்.

என் இரவுகளை
எல்லாம்
வானவில்லாக்கி
நட்சத்திரங்களை
பகலில்வாழ
வைத்து போகிறாய்.

நீ என்பது
எல்லாமே அழகாகிறது.

உன் பேச்சு.
உன் புன்னகை.
உன் நடை.
உன் குறும்பு.
உன் அன்பு.

இப்படி எல்லாமே
அழகாக தெரிகிறது.

இப்போது
உன்னை நேசிக்கும்
நானும் அழகு
ஆகிறேன்.

No comments: