Tuesday, May 27, 2008

மழை

இங்கு மழை
பொழிகிறது.

உன்னோடு வானவில்
ரசித்த மழை
நாட்கள் மனதில்
நனைந்து கொண்டு
தான் இருக்கின்றன.

மழையில் நனைவது
எனக்கு பிடிக்கும்
என தெரிந்து
குடை தராமல்
சென்று விடுவாய்
நீ.

கோபம் கொண்டு
நான் ஏன் குடை
தரவில்லை என
கேட்கும் போது
விடு கதையாய்
சிரிப்பாய்.

என் கோபம்
கூட உன்
புன்னகையில்
குழந்தை ஆகும்.

கல்லூரியின் இறுதி
நாளன்று வானில்
மட்டுமா மழை
பொழிந்தது?

நம் இருவரின்
கண்களிலும் தான்.

இன்றும் மழை
பொழிகிறது.

நீ இல்லை.
நானும் இல்லை.
ஆனால் நம்
நட்பின் நினைவுகள்
மட்டும் நனைந்து
கொண்டே இருக்கின்றன.

No comments: