Tuesday, May 27, 2008

தேநீரும் தேவதையும்

அலுவலகத்தில்
தேநீர் இடைவேளை.

என் தேவதை
அவள் தோழியோடு
தேநீர் அருந்த
வருகிறாள்.

அவள் கரம்
பிடிக்க காத்து
கிடக்கின்றன.
தேநீர் கோப்பைகள்.

எல்லா கோப்பைகளையும்
ஏமாற்றி விட்டு
ஒரு கோப்பைக்கு
மட்டும் உயிர்
கொடுக்கிறாள்
என் தேவதை.
அவள் பிஞ்சு
விரல் தொட்டு.

அவள் உதடு
பதித்து உரியும்
போது எல்லாம்
தீர்ந்து போவது
தேநீர் மட்டும்
அல்ல.
என் உயிரும் தான்.


அவள் அதரம்
தொட முடியாத
சோகத்தில்,
தேவதையின் தோழி
கரத்தில் இருந்து
தற்கொலை செய்து
கொள்கிறது.
இன்னொரு கோப்பை.

இதை புரிந்து
கொள்ள முடியாமல்
"கை தவறி
விழுந்து விட்டது"
என்கிறார்கள்.

அவளோ கோப்பைக்குள்
இருக்கும் தேனீரை
பருக,
கோப்பையோ அவள்
எச்சிலை அமுதமென
எண்ணி பருகுகின்றது.

என்ன முரண்பாடு?

மலருள் இருக்கும்
தேனை பட்டாம்
பூச்சி பருகுவது
இயல்பு.

ஆனால் இங்கு
பூவே அல்லவா
தேனை பருகுகிறது?

இன்னொரு பிறவி
இருந்தால் எப்படியாவது
கோப்பையாய் பிறந்து
விட வேண்டும்.
என் தேவதையின்
இதழ் ஈரம்
பட.

அதற்குள் முடிந்து
விட்டதா?
தேவதையின் தேநீர்
திருவிழா.

காத்து இருக்கிறேன்.
தேவதையின் இன்னொரு
திரு விழாவிற்காக.

No comments: