Tuesday, May 27, 2008

வலிக்க விடு

நீ பரிசாக
கொடுத்த பார்வைகள்.
அவை தான் என்
உயிரை மூடும் போர்வைகள்.

உன் நிழலில்
இளைப்பாற,
என் நிழல் ஏங்கும்.

உன் நினைவுகளை
ஏந்தி கொண்டு
தான் விழிகள்
இறுதியாய் தூங்கும்.

உன் காலடி தடத்தில்
ஆயிரம் கவிதைகள்
பிறக்குமடி.

உன் கண்களின் இடத்தில்
மனம் கவலைகள்
துறக்குமடி.

ஏடுகள் உன் பெயரை
ஏந்தி கொள்ள
தவம் கிடக்கும்.

இருந்தாலும் அதை
என் உள்ளங்கையில்
எழுத தான்
எனக்கு பிடிக்கும்.

வலிகள் கூட
இனிக்கிறது.
நீ தரும் போது.

சில காலம்
இப்படியே வலிக்க
விடு.

அப்போது தான்
உன் வருடலின் சுகம்
எனக்கு புரியும்

No comments: