Tuesday, May 27, 2008

விலகி போகிறேன்

விழிகளை பார்த்தால்
பேசி விடுவோமோ என்று
விலகி போகிறேன்.

உன் விழிகள்
காணும் வேளையில்
மௌனமாய் சாகிறேன்.

அருகில் நீ
இருந்தும் நான்
எங்கோ பார்க்கிறேன்.

நீ கடந்து
செல்லும் வேளையில்
கண்ணில் வியர்க்கிறேன்.

நீ பேசாமல்
இருப்பது எனக்கு
நல்லது!

இருந்தும் நீ
பேச வேண்டும்
என்ற ஆவல்
எனக்கு உள்ளது.

தொடு வானமாய்
இருந்தவன்
இன்று தொலை வானம்
ஆகிறேன்.

நிழலாக கிடந்தவன்
இன்று நெடுந்தூரம்
போகிறேன்.

பிரிவுகள் உறவினை
வளர்த்து விடுமோ
தெரியவில்லை.

உன்னை பிரிந்து
என்னால் உயிர்
வாழ இயலுமோ
ஒன்றும் புரியவில்லை.

நீ நடந்து
சென்ற பாதையை
வெறித்த படி
பார்க்கும் என்
கண்கள்.

உன் சின்ன
பாதங்களின்
தடங்களை தேடி
இன்றும் நான்….

No comments: