Tuesday, May 27, 2008

தடுமாறும் தமிழ்

கல் தோன்றி
மண் தோன்றா
காலம் முதல்
வல்லினம் ஆக இருந்து
வந்த “க ச ட த ப ற”

உன் இதழ்
வழி வருகையில்
மெல்லினம் ஆகி
நிற்கிறது.

தமிழே அவளை
கண்டு உனக்கும்
தடுமாற்றமா?

துணையாக நீ
வர கடவுளை
வேண்டி விரதம்
இருக்கும் நாள்களில்
பசிக்கு கூட
ருசி இருப்பது
புரிந்தது.

நீ வானவில்லில்
சேராத எட்டாம்
நிறம்.

நீ வந்து
சேராவிடில்
நானோ பட்ட
மரம்.

உண்மையில் நானோ
சிறகு ஒடிந்த
ஒரு பட்டாம்
பூசி.

என்னை சிறையில்
அடைத்து
ஏனடி கண்ணா
மூச்சி.?

தேநீரும் தேவதையும்

அலுவலகத்தில்
தேநீர் இடைவேளை.

என் தேவதை
அவள் தோழியோடு
தேநீர் அருந்த
வருகிறாள்.

அவள் கரம்
பிடிக்க காத்து
கிடக்கின்றன.
தேநீர் கோப்பைகள்.

எல்லா கோப்பைகளையும்
ஏமாற்றி விட்டு
ஒரு கோப்பைக்கு
மட்டும் உயிர்
கொடுக்கிறாள்
என் தேவதை.
அவள் பிஞ்சு
விரல் தொட்டு.

அவள் உதடு
பதித்து உரியும்
போது எல்லாம்
தீர்ந்து போவது
தேநீர் மட்டும்
அல்ல.
என் உயிரும் தான்.


அவள் அதரம்
தொட முடியாத
சோகத்தில்,
தேவதையின் தோழி
கரத்தில் இருந்து
தற்கொலை செய்து
கொள்கிறது.
இன்னொரு கோப்பை.

இதை புரிந்து
கொள்ள முடியாமல்
"கை தவறி
விழுந்து விட்டது"
என்கிறார்கள்.

அவளோ கோப்பைக்குள்
இருக்கும் தேனீரை
பருக,
கோப்பையோ அவள்
எச்சிலை அமுதமென
எண்ணி பருகுகின்றது.

என்ன முரண்பாடு?

மலருள் இருக்கும்
தேனை பட்டாம்
பூச்சி பருகுவது
இயல்பு.

ஆனால் இங்கு
பூவே அல்லவா
தேனை பருகுகிறது?

இன்னொரு பிறவி
இருந்தால் எப்படியாவது
கோப்பையாய் பிறந்து
விட வேண்டும்.
என் தேவதையின்
இதழ் ஈரம்
பட.

அதற்குள் முடிந்து
விட்டதா?
தேவதையின் தேநீர்
திருவிழா.

காத்து இருக்கிறேன்.
தேவதையின் இன்னொரு
திரு விழாவிற்காக.

மழை

இங்கு மழை
பொழிகிறது.

உன்னோடு வானவில்
ரசித்த மழை
நாட்கள் மனதில்
நனைந்து கொண்டு
தான் இருக்கின்றன.

மழையில் நனைவது
எனக்கு பிடிக்கும்
என தெரிந்து
குடை தராமல்
சென்று விடுவாய்
நீ.

கோபம் கொண்டு
நான் ஏன் குடை
தரவில்லை என
கேட்கும் போது
விடு கதையாய்
சிரிப்பாய்.

என் கோபம்
கூட உன்
புன்னகையில்
குழந்தை ஆகும்.

கல்லூரியின் இறுதி
நாளன்று வானில்
மட்டுமா மழை
பொழிந்தது?

நம் இருவரின்
கண்களிலும் தான்.

இன்றும் மழை
பொழிகிறது.

நீ இல்லை.
நானும் இல்லை.
ஆனால் நம்
நட்பின் நினைவுகள்
மட்டும் நனைந்து
கொண்டே இருக்கின்றன.

காதல் பைபிள்

கேளுங்கள் தரப்படும்.
கேட்டேன்.
அவள் தந்ததோ
மறக்க முடியாத
சோகத்தை.

தட்டுங்கள் திறக்கப்படும்.
தட்டினேன்.
திறக்கப்பட்டதோ
கல்லறை கதவுகள்.

தேடுங்கள் கண்டடைவீர்கள்.
தேடினேன்.
கண்டதோ
சிதைந்த என்
வாழ்வை

எப்படி புரியும்?

கிடைத்ததை பெற்று
கொள்ள வாழ்க்கை
ஒன்றும் பிச்சை
இல்லை.

அன்பே எனக்கு
கிடைக்காமல்
போய் விடாதே.

அட்சய பாத்திரம்
பிச்சை எடுத்தால்
அகிலம் தாங்காது.

உன் காதலை
நீயே தந்து
விடு.

உன் இமை
விடியளுக்கு
காத்து இருந்து
அஸ்தமனம் ஆனவன்
நானடி.

உனக்காக உயிரையே
தருவேன் என
தெரிந்தும் தயக்கம்
ஏனடி?

உனக்கே புரியாவிட்டால்
உலகுக்கு எப்படி
புரியும்?

நீதான் என்
உலகம் என்று.

என்ன ஆகும்?

பாதையில் பதிந்த
உன் பாத சுவடுகளை
கண்டு நிலவு
தேவதை திகைக்கிறாள்.

“நினைவு இன்றி
நித்திரையில் ஏற்கனவே
இங்கு வந்து
விட்டோமோ”
என்று.

உன் பாதம்
கண்டதற்கே
இப்படி என்றால்,
பாவம்!
உன் முகம்
கண்டால் என்ன
ஆகும்?

எனக்கென எதுவுமே இல்லையடி

எனக்கும் இந்த
உலகத்திற்கும் ஆன
உறவு உன்னை
பார்த்த பின்பு
தான் தொடங்கியது.

முதன் முதலாய்
பூவின் வாசம்
நுகர வைத்தாய்.

முட்களை கூட
ரசிக்க வைத்தாய்.

இதயம் போலதான்
உன் நினைவுகளும்.

நான் கவனிக்கா
விட்டாலும்.
எனக்குள் துடித்து
கொண்டே இருக்கிறது.

உன் நினைவு
என்னும் போதி
மரத்தின் கீழ்
தான் நான்
ஞானம் பெற்றேன்.

எனக்கென தனி
உலகம் கொடுத்தது
நீ தான்.


புழுவும்
புழுதியும்
படிந்து கிடக்கிறது
உன்னை தாலாட்டிய
என் கவிதை
புத்தகம்.

காற்றில் அதன்
காகிதங்கள் திறக்கும்
போதெல்லாம் உன்
வியர்வையின் வாசம்
என்னை குளிப்பாட்டுகிறது.

அஞ்சன வண்ண
கூந்தலும்,
இருவிழி என்னும்
காந்தமும்,

என் மூளைக்குள்
வேள்வி நடத்தி
போகின்றன.

எனக்கென எதுவுமே
இல்லையடி.

நீ விட்டு
போன நினைவுகளையும்.
பட்டு போன
என் பருவத்தையும்
தவிர

எனக்கென எதுவுமே
இல்லையடி.

தேவதை

மழை காலத்தில்
வெளியில் வந்து
விடாதே.
மழை துளி
மண்ணை விட்டு
விட்டு உன்
மடியில் விழும்.

கோவிலுக்கு மறந்தும்
சென்று விடாதே
தெய்வத்தை விட்டு
விட்டு கூட்டம்
உன்னை தொழும்.

மீன் என எண்ணி
கொக்குகள் உன்
கண்களை கொததி
தின்ன நேரலாம்.
கொக்குகளை கண்டால்
கண்ணை மூடி கொள்.

உதிரம் தோய்ந்த
உன் அதரம்
கண்டு செவ்வானம்
வெட்கப்படும்.
மாலை வேளையில்
சிரித்து விடாதே.

இயற்கையை பழித்திட
பிறந்தவள் நீயா?
என் இதயத்தில்
வாழும் நீ
தேவதையின் சேயா?

மணல் மேடூகள்

முதன் முதலாய்
என் தாயின்
கரம் பிடித்து
நானும்,
உன் தந்தையின்
தோளில் சாய்ந்த படி
நீயும் பள்ளி
சேர்க்கையில் அறிமுகம்
ஆனோம்.

ஒற்றை பின்னலும்,
தெற்று பல்லுமாய்,
சிரித்து விட்டு
போகும் உன் கண்கள்
இன்னும் இதயத்தில்.

முதல் முதலில்
அ எழுத
ஆசிரியை சொல்லி
கொடுக்க,
நீயோ அம்மா
என அழுத படி
கிடக்க,

அமைதியாய் உன்
அருகில் வந்து
நீட்டினேன் சில
ஆரஞ்சு மிட்டாய்களை.
நீயோ வாஞ்சையோடு
வாங்கி கொண்டாய்.

முதன் முதலாய்
நமக்குள் துளிர்க்க
ஆரம்பித்து இருந்தது
ஸ்னேகித செடி.


முதல் நாளில்
அழுகை மூஞ்சியாய்
தெரிந்த நீ,
பிறகு வாயாடி
ஆகி போனாய்.


தினமும் நீ
எனக்காக எடுத்து
வந்த நெல்லிக்காய்,
மாம்பிஞ்சுகள்,
கடலை மிட்டாய்.

இன்று நினைத்தாலும்
பசி ஆறிவிடுகிறது.

என் பிறந்த
நாள் அன்று நான்
அணிந்து வந்த
சட்டையை தொட்டு
பார்த்து ”நல்லா இருக்குடா”
என்றாய்.

அதில் இருந்து
எல்லா விடுமுறையிலும்
அதையே அணிய
ஆரம்பித்தேன்.

”என் ப்ரெண்ட்
தான் பா ஃபர்ஸ்ட் ரங்க்”

என நீ வீட்டில்
பெருமை அடித்து
கொள்வாயே.

இப்போது என்
வெற்றியை உணர
கூட யாருமில்லை.

ஊமைக்கு கூட
உன்னோடு பேச
பிடிக்கும்.

நீ வானுலகில்
இருந்து நட்பினை
சுமந்து வந்த
தேவதை.

உன் மனம்
உணருமோ!
நான் இன்று
நட்பில்லாமல்
சாவதை!


நம் ஐந்தாம்
வகுப்பின் முடிவில்
பள்ளிக்கு அருகில்
இருந்த மணல்
மேட்டில் அமர்ந்து
கொண்டு இருந்தாய்!
”நான் நகரத்தில்
வேற பள்ளி
கூடத்தில் சேருகிறேன்”
என நான் சொன்ன
போது நனைந்து
இருந்தன நம்
நான்கு கண்கள்.

இறுதியாய் உன்னை
கண்டது அப்போது
தான்.

காலத்தில் ஓட்டத்தில்
உன்னை தொலைத்து
விட்டேன்.

இப்போதும் ஊருக்கு
செல்லும் போதெல்லாம்
உன் கண்ணீரால்
நனைத்த அந்த
மணல் மேடூகளை
நான் நானைக்க
மறப்பதில்லை

என் கண்ணீரால்.....

Wednesday, August 29, 2007

அழகான அழுகை


நான் கதறி
அழும் போது
எல்லாம் ஆறுதலாக
நினைத்து கொள்வது
உன்னை தான்.

ஆனால் நீயே
நான் அழ காரணம்
என்றால் என்ன
செய்வேன்?

அழுகிறேன்
எனக்குள்
மௌனமாக

Wednesday, August 22, 2007

கவிதை பெண்ணே!



கவிதை பெண்ணே!

ஏட்டினில் எழுதும்

முன்னே

மறைந்து போனது

என்ன?

கானல் மலரே!

பறிக்கும் முன்னே

முட்களால் குத்தி

காயம் தந்த

மாயம் என்ன?

உன்னை எழுத

நானே வார்த்தை

ஆனேன்.

உன்னை எழுதி

ஏனோ தொலைந்து

போனேன்.

தூரிகை நானாக

வண்ணம் நீயாக

ஓவியம் வரையலாம்

நீரில் கரைந்தாலும்

நிம்மதியாக கரையலாம்

நம்பிக்கை


இடியாய் இதயத்தில்

ஆயிரம் வலி.


வாழ்க்கை வேள்வியில்

முயற்சிகள் பலி.


அவைதான் நம்மை

செதுக்கிய உளி.


கருகிய வாழ்வில்,

கனவினை தெளி.


மீண்டும் வருவோம்.

நம்பிக்கையே துளி

Friday, August 17, 2007

பிறந்த நாள் வாழ்த்து


வாசம் வீசும்
பூவிற்கு வாயிருந்தால்
வாசல் வந்து
உன்னை வாழ்த்தும்.

ஊமையாகி போனதால்
புன்னகை புரிந்து
பூமியில் மிதக்கிறது.

கம்பன் எழுதிய
ஏடுகள் காற்றில்
பறந்து உன்னை
காண வரும்.

நீ பிறந்த
இந்த நாளில்
கவிதைகள் கோடி
தரும்.

இலையுதிர் காலங்கள்
பசுமை மழை பொழியும்.

சூரிய நெருப்பில் இருந்து
பனி வழியும்.

வாழ்த்த வார்த்தைகள்
இன்றி தமிழ்
தடுமாறும்.

உன்னை ஏந்திக்கொள்ள
வானம் பூமியாய் இடம் மாறும்.

வேண்டும் நீ


விடியும் வரை

கதைகள் பேச

விழிக்கு அருகில்

வீற்றிரு பெண்ணே,


மொழிகள் எல்லாம்

சுமை தானே

மௌனம் மட்டும்

பூத்திரு கண்ணே,


மடி மீது தலை

சாய்த்து மழலையாக

நான் தூங்க

வரம் கொடு.

பிணமாகி நான்

தொலைந்தாலும்

உன் கூந்தல் பூவை

வீசி வீடு.


முகில் நீரை எடுத்து

முகம் துடைக்கும்

தேவதையே,


என் கண்ணீர் துளி

உன் காலடியில்

சிந்துவது தெரிகிறதா?


பகலில் குளிரும்

நிலவு நீயே,

என்னை தாலாட்டும்

நீயும் தாயே,


உன் மூச்சு காற்றினால்

ஒரு முகவரி

சொல்லி வீடு.


அந்த வெப்பம்

கை பிடித்து

உந்தன் வேதனை

தீர்த்து வைப்பேன்


உனக்கு மட்டுமே

மாலை சூடுவேன்.

இல்லையேல் மண்ணில்

என்னை மூடுவேன்.


புன்னகை பூ வீசி

என்னை கொன்றவளே,

என்னிடம் மலர் தூவி

எங்கோ சென்றவளே,


இன்னும் உயிரோடு

உனக்காக இருக்கிறேன்.


என்னை எப்போதும்

ஏனோ மறக்கிறேன்.


வலிகள் தாங்கி விட

நெஞ்சில் வலிமை

இல்லையடி


ஒரு வார்த்தை

பேசி விட்டால்

மனம் எரிமலை

பிளக்குமடி.


உன் நினைவுகள்

சுமப்பதும் கூட

சுகமாய் தோன்றுதடி


விளக்கில் விழுந்து

சாகும் வீட்டில்

பூச்சி ஆகிவிட்டேன்.


பிஞ்சு விரல்

தொட்டால்

உயிர் பிறவி

பயன் அடையும்

தீராத ஆசைகள்


உயிர்கள் எதுவும்
இல்லாத தேசத்திலே
என்னோடு நீ
வேண்டும்.
வார்த்தைகள் எல்லாம்
வற்றும் வரை
வாய்மொழி
கோடிபேச
வேண்டும்.
நானம் கொண்டு
நீ நகரும் வேளையில்
என் உயிர்
ஊனமாக வேண்டும்.
நானோ உன்
கண் நோக்க
நீயோ மண் நோக்க
முடிவிலா இந்த
விளையாட்டு தொடர
வேண்டும்.
இப்படி தீராத
ஆசைகள் கோடி
அடி நெஞ்சில்
ஒன்றாவது நடக்குமா?
பதில் சொல்லடி
என் நிலவே

நீயும் கவிதை


கவிதை கேட்டு
வெகு நாள்கள்
ஆகி விட்டது.
பெண்ணே
ஒரே ஒரு முறை
உன் பெயரை
சொல்லி விட்டு போ.

நேசிக்கிறேன்


நீ என்னை
நேசிப்பதற்கே
யோசிக்கிறாய்.

ஆனால் நானோ
உன்னை
நேசிப்பதற்காகவே
சுவாசிக்கிறேன்

உனது நினைவுகள்



நான் உடைந்து
விடுவேன் என
தெரிந்தும்,
என்னை உடைத்து
செல்பவளே,
நான் உடையும்
போது ஒழுகும்
உதிரத்தை சுவாசித்து
பார்.
உன் நினைவுகளின்
வாசம் மட்டுமே
அதில் வீசும்

அழகான பூக்காரி

என் வாசலுக்கு
வாசத்தை கொண்டு
வரும் பூக்காரி நீ.

வண்ணங்களை எல்லாம்
பூக்களில் ஊற்றி விட்டு,
நிறம் இழந்து நிற்கும்
வானவில் நீ.

புன்னகையை விலைபேசி
பூக்களுக்கு விற்று விட்டு,
மௌனத்தால் சிரிக்கும்
மழலை பூ நீ.

பூக்கள் இருக்கும்
தோட்டத்திற்கு போகாதே
என சொல்லியும்
கேட்காமல் செல்பவளே,

இங்கே பார்!

மலர் எது
என தெரியாமல்,
வண்ணத்துப்பூச்சிகள்
உன் கன்னத்தை
மொய்க்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகளுக்கு
இந்த நிலமை என்றால்,
பாவம் பூக்கள்!

நீ கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடமும்
வண்ணத்துப்பூச்சி தான்
வருகிறதோ என
எதிர்பார்த்து ஏமாந்து
போகின்றன.

பூக்களுக்கு கூட
சிரிக்க கற்று கொடுத்தவளே,

எனக்கு மட்டும்
ஏனோ அழ கற்று
கொடுக்க முயல்கிறாய்?

உன் நினைவு
வாசத்தில்,
நம் காதல்
தேசத்தில்

உனக்காக நான்………………

Thursday, July 06, 2006

மரணம்




வாழ்க்கை என்று முடியுமோ

என்று நினைக்கும்

ஒவ்வொரு நொடியும் மரணம்.

வாழ்வையே அனுபவித்து வாழ்ந்தால்

ஏது மரணம் பற்றி ஒரு மனம்.

உலகில் மரணம் வென்ற

ஒரே உயிர் மரணம் தான்.

மரணத்திற்கு பின்

ற்படும் புது ஜனனம்.

மரணம் கூட உயர்ந்தது தான்!

நான் பிறந்த மடியிலேயே

அது நிகழ்வது ஆனால். .