நீ நடந்த
ஒற்றையடி பாதையில்
உன் மெல்லடி சுவடுகள்
அழியாமல் விலகி
நடப்பவன் நான்.
நீ அருகில்
இருக்கும் போது
மலராத அரும்புகள்
எல்லாம் இன்று
என்னை பார்த்து
நகைக்கின்றன.
காலத்தின் ஓட்டத்தில்
நீ இன்று இல்லை.
ஆனால் அந்த
ஒற்றையடி பாதை?
Monday, August 18, 2008
Thursday, August 14, 2008
புதிய பாரதம்
வாசம் வீசும் பூவாய்
நாம் வாழ்ந்து பார்ப்போம்.
நேசம் பேசும் தேசத்தில்
நாம் கைகள் கோர்ப்போம்.
மனிதனை மனிதனாக எண்ணுவோம்.
கிடைத்ததை பகிர்ந்து உண்ணுவோம்.
தன்னலம் மறப்போம்.
மண்நலம் காப்போம்.
நாகரிக சுவடுகளில்
நசுங்கி போன பழையன
எடுப்போம்.
அன்பின் இழைதனை
அதனில் கொடுப்போம்.
பாரத தாயின்
பாத அடிகளுக்கு
செருப்பாக மாறுவோம்.
இரத்தம் குடிக்கும்
யுத்த பேய்களின்
உயிர் குடிப்போம்.
இலஞ்ச ஊழல்
நச்சு பாம்புகளின்
தலைகளை உடைப்போம்.
நாட்டுக்கோர் கேடு
என்றால்
வீட்டுக்கொருவர்
இணைந்து துயர்
களைவோம்.
நம் அன்னையின்
கண்ணீர் துடைக்க
நீசர்களின் கரம்
வெட்டுவோம்.
வன்முறையின்
தலையில் ஓங்கி
கொட்டுவோம்.
பூமிபோல சிலகாலம்
பொறுப்போம்.
காலம் கரமீந்தால்
ஒறுப்போம்.
பழைய தடைகள்
உடைப்போம்.
புதிய பாரதம்
படைப்போம்.
நாம் வாழ்ந்து பார்ப்போம்.
நேசம் பேசும் தேசத்தில்
நாம் கைகள் கோர்ப்போம்.
மனிதனை மனிதனாக எண்ணுவோம்.
கிடைத்ததை பகிர்ந்து உண்ணுவோம்.
தன்னலம் மறப்போம்.
மண்நலம் காப்போம்.
நாகரிக சுவடுகளில்
நசுங்கி போன பழையன
எடுப்போம்.
அன்பின் இழைதனை
அதனில் கொடுப்போம்.
பாரத தாயின்
பாத அடிகளுக்கு
செருப்பாக மாறுவோம்.
இரத்தம் குடிக்கும்
யுத்த பேய்களின்
உயிர் குடிப்போம்.
இலஞ்ச ஊழல்
நச்சு பாம்புகளின்
தலைகளை உடைப்போம்.
நாட்டுக்கோர் கேடு
என்றால்
வீட்டுக்கொருவர்
இணைந்து துயர்
களைவோம்.
நம் அன்னையின்
கண்ணீர் துடைக்க
நீசர்களின் கரம்
வெட்டுவோம்.
வன்முறையின்
தலையில் ஓங்கி
கொட்டுவோம்.
பூமிபோல சிலகாலம்
பொறுப்போம்.
காலம் கரமீந்தால்
ஒறுப்போம்.
பழைய தடைகள்
உடைப்போம்.
புதிய பாரதம்
படைப்போம்.
Wednesday, August 13, 2008
சந்தேகம்
மறைத்து வை!
உன் தாவணியை.
உன் அழகை கண்டு
வானவில் தன்னை விட்டு
உன்னை வந்து ஒட்டி
கொண்டு விட்டதாக
வானத்திற்கு
சந்தேகம் வந்து விட போகிறது
உன் தாவணியை.
உன் அழகை கண்டு
வானவில் தன்னை விட்டு
உன்னை வந்து ஒட்டி
கொண்டு விட்டதாக
வானத்திற்கு
சந்தேகம் வந்து விட போகிறது
Tuesday, August 12, 2008
கண்ணீர் தேசத்தின் அழகி
தொடுவானம் நீ.
தொலைதூரம் நான்.
தொட எண்ணினாலும்
சுட எண்ணுகிறாய்.
அடியே!
பாலை தேசம் நீ.
கள்ளி செடியாய் நான்.
முள்கள் என்மீது
முளைத்தற்காக
அழவில்லை.
உன் முகத்திற்காக
அழுகிறேன்.
கண்ணீர் தேசத்தின்
கடைசி அழகியே
மடியப் போவது
என் காதலல்ல.
உன் கர்வம்தான்.
தொலைதூரம் நான்.
தொட எண்ணினாலும்
சுட எண்ணுகிறாய்.
அடியே!
பாலை தேசம் நீ.
கள்ளி செடியாய் நான்.
முள்கள் என்மீது
முளைத்தற்காக
அழவில்லை.
உன் முகத்திற்காக
அழுகிறேன்.
கண்ணீர் தேசத்தின்
கடைசி அழகியே
மடியப் போவது
என் காதலல்ல.
உன் கர்வம்தான்.
நட்பு வாழும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கனவு
உலகம் முடிவதில்லை.
உறங்கியே கிடக்கும்
விழிக்கு பொழுதுகள்
என்றுமே விடிவதில்லை.
பசுமையாய் நினைவுகள்
ஆயிரம் நெங்சில்
பார்த்தவுடன் மலரும்.
இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்தே
வாழ்க்கை வளரும்.
பிரிவு என்பது
நிரந்தரம் அல்ல!
உறவு பலப்படுமெ.
பிரிவை வென்ற
நட்பு வாழும்.
உண்மை புலப்படுமே.
மனமே!
அழும் மனமே!
நீ தாங்கி விடு.
தினமும் தீயில் எரிந்தாலும்
ஒருமுறை சிரித்து விடு.
தோல்வி என்பதும் கூட
ஒருவகை பாடமே.
வாழ்க்கை கற்கும்
பள்ளி கூடமே.
சோகம் இங்கு
யாருக்கு இல்லை.
அழுவதால் எதுவும்
முடிவதும் இல்லை.
காயங்கள் எல்லாம்
ஒருநாள் ஆறிவிடும்.
காலங்கள் நமக்காய்
இனிதாக மாறிவிடும்.
நம்பிக்கை மட்டும்
இருந்தால் போதும்.
நாளைய உலகம்
கையில் சேரும்.
முடிவு என்பது
இன்னொன்றின் தொடக்கம்.
நம் நட்பும்
இதில் அடக்கம்.
என்றும் நண்பனாய்
உனக்கு இருப்பேன்.
இன்றோடு கவலைகள்
எல்லாம் மறப்பாய்.
ஒவ்வொரு கனவு
உலகம் முடிவதில்லை.
உறங்கியே கிடக்கும்
விழிக்கு பொழுதுகள்
என்றுமே விடிவதில்லை.
பசுமையாய் நினைவுகள்
ஆயிரம் நெங்சில்
பார்த்தவுடன் மலரும்.
இன்பம் துன்பம்
இரண்டும் இணைந்தே
வாழ்க்கை வளரும்.
பிரிவு என்பது
நிரந்தரம் அல்ல!
உறவு பலப்படுமெ.
பிரிவை வென்ற
நட்பு வாழும்.
உண்மை புலப்படுமே.
மனமே!
அழும் மனமே!
நீ தாங்கி விடு.
தினமும் தீயில் எரிந்தாலும்
ஒருமுறை சிரித்து விடு.
தோல்வி என்பதும் கூட
ஒருவகை பாடமே.
வாழ்க்கை கற்கும்
பள்ளி கூடமே.
சோகம் இங்கு
யாருக்கு இல்லை.
அழுவதால் எதுவும்
முடிவதும் இல்லை.
காயங்கள் எல்லாம்
ஒருநாள் ஆறிவிடும்.
காலங்கள் நமக்காய்
இனிதாக மாறிவிடும்.
நம்பிக்கை மட்டும்
இருந்தால் போதும்.
நாளைய உலகம்
கையில் சேரும்.
முடிவு என்பது
இன்னொன்றின் தொடக்கம்.
நம் நட்பும்
இதில் அடக்கம்.
என்றும் நண்பனாய்
உனக்கு இருப்பேன்.
இன்றோடு கவலைகள்
எல்லாம் மறப்பாய்.
கேட்டு பார்
கடைசியாய் உன்னை
கண்டது எப்போது?
அறவே நினைவில்லை.
முதலாய் உன்னை
சுவாசித்த நாள்
மட்டும் இன்னும்
வசந்தமாய் வாழ்வில்.
நீ பேசுவாய்
என எதிர்பார்த்தே
ஊமையாய் போனது
எந்தன் நாட்கள்.
சிரித்த உன்
முகத்தை எண்ணி
அழுத படியே
இன்னும் நான்.
நீ நடந்த பாதைகளில்
பித்தனாய் அமர்ந்து
கிடப்பதில் ஏனோ
எனக்கொரு ஆறுதல்.
உன்னை எவ்வளவு
நேசித்தேன் என்பதை
வெள்ளை தாளை
கண்ணீரில் நனைத்து
கொண்டு இருக்கும்
என் பேனாவை
கேட்டு பார்.
கண்டது எப்போது?
அறவே நினைவில்லை.
முதலாய் உன்னை
சுவாசித்த நாள்
மட்டும் இன்னும்
வசந்தமாய் வாழ்வில்.
நீ பேசுவாய்
என எதிர்பார்த்தே
ஊமையாய் போனது
எந்தன் நாட்கள்.
சிரித்த உன்
முகத்தை எண்ணி
அழுத படியே
இன்னும் நான்.
நீ நடந்த பாதைகளில்
பித்தனாய் அமர்ந்து
கிடப்பதில் ஏனோ
எனக்கொரு ஆறுதல்.
உன்னை எவ்வளவு
நேசித்தேன் என்பதை
வெள்ளை தாளை
கண்ணீரில் நனைத்து
கொண்டு இருக்கும்
என் பேனாவை
கேட்டு பார்.
கல்லூரி நட்பு
தனியாய் நடந்தேன்.
துணையாய் வந்தாய்.
கனவில் இருந்தேன்.
நினைவை தந்தாய்.
பூக்கள் உந்தன் சொந்தங்கள்.
புல்வெளி உன் பிம்பங்கள்.
மழையாய் வந்த புன்னகை
மலராய் நானும் நனைகிறேன்.
வழுக்கி விழும் நேரத்தில்
உன் வார்த்தை ஊன்றுகோல்.
தடுக்கி நான் விழுகையில்
தாங்கும் பூமியுன் கரங்கள்.
நெருப்பாய் சூழ்ந்த துன்பங்கள்
நீராய் உன் ஆறுதல்.
வெற்றி என்பது தொலைவானம்.
உன்னால் அதுவும் தொடுவானம்.
நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிறம்தரும் உந்தன் நட்பு.
சபிக்க பட்ட காலத்தில்
வரமாய் வருமுன் நட்பு.
இன்னொரு பிறவி இதுபோல
இறைவனை நாமும் கெட்போமா?
கண்ணை கசக்கி அழுதாலும்
கல்லூரி வழ்க்கை திரும்புமா?
இருவேறு வயிற்றில் பிறந்தாலும்
உருவான நட்பால் ஒன்றானோம்.
நட்பு நோய் தொற்றியதால்
நாம் நண்பர்கள் என்றானோம்.
துணையாய் வந்தாய்.
கனவில் இருந்தேன்.
நினைவை தந்தாய்.
பூக்கள் உந்தன் சொந்தங்கள்.
புல்வெளி உன் பிம்பங்கள்.
மழையாய் வந்த புன்னகை
மலராய் நானும் நனைகிறேன்.
வழுக்கி விழும் நேரத்தில்
உன் வார்த்தை ஊன்றுகோல்.
தடுக்கி நான் விழுகையில்
தாங்கும் பூமியுன் கரங்கள்.
நெருப்பாய் சூழ்ந்த துன்பங்கள்
நீராய் உன் ஆறுதல்.
வெற்றி என்பது தொலைவானம்.
உன்னால் அதுவும் தொடுவானம்.
நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிறம்தரும் உந்தன் நட்பு.
சபிக்க பட்ட காலத்தில்
வரமாய் வருமுன் நட்பு.
இன்னொரு பிறவி இதுபோல
இறைவனை நாமும் கெட்போமா?
கண்ணை கசக்கி அழுதாலும்
கல்லூரி வழ்க்கை திரும்புமா?
இருவேறு வயிற்றில் பிறந்தாலும்
உருவான நட்பால் ஒன்றானோம்.
நட்பு நோய் தொற்றியதால்
நாம் நண்பர்கள் என்றானோம்.
Wednesday, July 30, 2008
போதைபொருள்
போதைபொருள் வைத்து
இருப்பவர்களை எல்லாம்
கைது செய்கிறார்களாம்!
பெண்ணே!
முடிந்தால் உன்னை
மறைத்து வை!
நான் தப்பித்து
கொள்வேன்.
இல்லையேல்
உன் புன்னகையையாவது
ஒளித்து வை.
நீ தப்பித்து
கொள்வாய்.
இருப்பவர்களை எல்லாம்
கைது செய்கிறார்களாம்!
பெண்ணே!
முடிந்தால் உன்னை
மறைத்து வை!
நான் தப்பித்து
கொள்வேன்.
இல்லையேல்
உன் புன்னகையையாவது
ஒளித்து வை.
நீ தப்பித்து
கொள்வாய்.
Monday, June 23, 2008
தெரியவில்லை
ஒன்றை இழந்துதான்
மற்றொன்றை பெற
வேண்டுமாம்!
உன்னையே இழந்து விட்டு
வேறெதை பெரிதாய்
பெற போகிறேனோ!
சத்தியமாய் எனக்கு
தெரியவில்லை.
மற்றொன்றை பெற
வேண்டுமாம்!
உன்னையே இழந்து விட்டு
வேறெதை பெரிதாய்
பெற போகிறேனோ!
சத்தியமாய் எனக்கு
தெரியவில்லை.
Thursday, June 19, 2008
இளைஞனே உனக்காக
சூரியன் வானில்
எரியும் போது,
மெழுகு வர்த்தியின்
உதவியை நாடுபவனே!
உலகமே உனக்காக
இருக்க,
நீயோ வட்டத்திற்குள்
வாழ்கிறாய்.
சோகத்தால் போசுங்கியவனே
சொர்க்கம் நமக்காக.
நம்பிக்கை என்னும்
அணுவில் தான்
வெற்றியின் சக்தி
புதைந்துள்ளது.
துவண்டு அழுதது
போதும்!
தோண்டி எடுக்க
துணி.
இறந்து பிறப்பதை
விட,
பிறந்து இறப்பது
மேல்.
அதனால் நண்பனே!
கனவினை கருவில்
கலைக்காதே!
அவை வளரட்டும்.
ஒன்றாவது உருபெரும்.
தோல்வி மூட்டைகளை
சுமந்து
நம்பிக்கை முதுகு
குனிந்தவனே
வியர்வை அரும்புகள்
வெற்றி பூக்கக்கள்
ஆகும் காலம்
வெகுதொலைவில் இல்லை.
நடக்க நடக்க
தான் புதரில்
பாதை தோன்றும்.
நீ தோற்க
தோற்க்கதான்,
வெற்றியின் வழி
தென்படும்.
தளராதே!
நம்பிக்கையோடு எழு.
உன்னால் எல்லாம்
முடியும்.
உன்னால் மட்டுமே
உலகம் விடியும்.
தீயவை அனைத்தும்
மடியும்.
ஓடு ஓடு உலகின்
விட்டத்தின் இறுதி
புள்ளி வரை ஓடு.
தடைகளை இடி.
வெற்றியை பிடி.
வாழ்வில் நோக்கத்தை
தேடு.
என்றும் ஆக்கதையே
நாடு.
உலகை உயர்த்த
வந்த உத்தமர்ககளுள்
நீயும் ஒருவன்.
உண்மையை மறந்து
விடாதே.
உனக்குள் இருக்கும்
உன்னை உயிர்ப்பித்து
கொண்டு வா.
அற்ப பதர்களோடு
ஒப்பிட்டு உன்னை
நீயே தாழ்த்தி
கொள்ளாதே.
எரிகின்ற ஞாயிறின்
தழல் நீ.
விரிகின்ற வானின்
நிழல் நீ.
உன் திறமைகள்
நீ அறிவாய்.
உலகம் அறிய
உயிர்த்தெழுவாய்.
நீ தொடுவதற்கு
தான் வெற்றி
சிகரங்கள் தவம்
கிடக்கின்றன.
விழுந்தாலும்
வீறு கொண்டு
வா.
நீ வரும் நாள்
வெகுதூரத்தில் இல்லை.
எரியும் போது,
மெழுகு வர்த்தியின்
உதவியை நாடுபவனே!
உலகமே உனக்காக
இருக்க,
நீயோ வட்டத்திற்குள்
வாழ்கிறாய்.
சோகத்தால் போசுங்கியவனே
சொர்க்கம் நமக்காக.
நம்பிக்கை என்னும்
அணுவில் தான்
வெற்றியின் சக்தி
புதைந்துள்ளது.
துவண்டு அழுதது
போதும்!
தோண்டி எடுக்க
துணி.
இறந்து பிறப்பதை
விட,
பிறந்து இறப்பது
மேல்.
அதனால் நண்பனே!
கனவினை கருவில்
கலைக்காதே!
அவை வளரட்டும்.
ஒன்றாவது உருபெரும்.
தோல்வி மூட்டைகளை
சுமந்து
நம்பிக்கை முதுகு
குனிந்தவனே
வியர்வை அரும்புகள்
வெற்றி பூக்கக்கள்
ஆகும் காலம்
வெகுதொலைவில் இல்லை.
நடக்க நடக்க
தான் புதரில்
பாதை தோன்றும்.
நீ தோற்க
தோற்க்கதான்,
வெற்றியின் வழி
தென்படும்.
தளராதே!
நம்பிக்கையோடு எழு.
உன்னால் எல்லாம்
முடியும்.
உன்னால் மட்டுமே
உலகம் விடியும்.
தீயவை அனைத்தும்
மடியும்.
ஓடு ஓடு உலகின்
விட்டத்தின் இறுதி
புள்ளி வரை ஓடு.
தடைகளை இடி.
வெற்றியை பிடி.
வாழ்வில் நோக்கத்தை
தேடு.
என்றும் ஆக்கதையே
நாடு.
உலகை உயர்த்த
வந்த உத்தமர்ககளுள்
நீயும் ஒருவன்.
உண்மையை மறந்து
விடாதே.
உனக்குள் இருக்கும்
உன்னை உயிர்ப்பித்து
கொண்டு வா.
அற்ப பதர்களோடு
ஒப்பிட்டு உன்னை
நீயே தாழ்த்தி
கொள்ளாதே.
எரிகின்ற ஞாயிறின்
தழல் நீ.
விரிகின்ற வானின்
நிழல் நீ.
உன் திறமைகள்
நீ அறிவாய்.
உலகம் அறிய
உயிர்த்தெழுவாய்.
நீ தொடுவதற்கு
தான் வெற்றி
சிகரங்கள் தவம்
கிடக்கின்றன.
விழுந்தாலும்
வீறு கொண்டு
வா.
நீ வரும் நாள்
வெகுதூரத்தில் இல்லை.
நான்..
ஓரிடத்தில் நில்லாது
யாரிடத்திலும் சொல்லாது
ஓயாது செல்லும்
நானொரு வழிபொக்கன்.
ஆதி அறியாது
அந்தம் தெரியாது
அமைதியாய் மறையும்
நானொரு வழிபோக்கன்.
காத்திருந்து கவலைகளை
பரிசாக பெறுதலும்
எதிர்பார்த்து ஏமாந்து
போதலுமென் பொழுதுபோக்கு.
என் பாதைகள்
கற்களும் முள்களுமாய்.
என் பயணங்கள்
இரத்தமும் சதையுமாய்.
விடை தெரியாத
இந்த பயணத்தில்
விடுகதையாய் மரிக்கின்றேன்.
அடிபட்டே அலுத்துபோன
இதயம் இப்போதும்
வலியை தாங்க
தயாராய்.
நேசத்தை நெஞ்சோடு
விதைத்து துயரை
அறுவடை செய்யும்
அதிர்ஷ்டசாலி நான்.
அழுதே பழகிபோன
விழிகளுக்கு இனிமேல்தான்
சிரிப்பது எப்படி
என நடிக்க கற்று
தரவேண்டும்.
நிழலுக்காக நான்
மரங்களின் ஓரங்களில்
ஒதுங்கிய போதெல்லாம்
பரிசாக கிடைத்ததோ
பறவையின் எச்சங்கள்.
இதோ இன்றும்
தனியாய் நடந்து
கொண்டே.............
யாரிடத்திலும் சொல்லாது
ஓயாது செல்லும்
நானொரு வழிபொக்கன்.
ஆதி அறியாது
அந்தம் தெரியாது
அமைதியாய் மறையும்
நானொரு வழிபோக்கன்.
காத்திருந்து கவலைகளை
பரிசாக பெறுதலும்
எதிர்பார்த்து ஏமாந்து
போதலுமென் பொழுதுபோக்கு.
என் பாதைகள்
கற்களும் முள்களுமாய்.
என் பயணங்கள்
இரத்தமும் சதையுமாய்.
விடை தெரியாத
இந்த பயணத்தில்
விடுகதையாய் மரிக்கின்றேன்.
அடிபட்டே அலுத்துபோன
இதயம் இப்போதும்
வலியை தாங்க
தயாராய்.
நேசத்தை நெஞ்சோடு
விதைத்து துயரை
அறுவடை செய்யும்
அதிர்ஷ்டசாலி நான்.
அழுதே பழகிபோன
விழிகளுக்கு இனிமேல்தான்
சிரிப்பது எப்படி
என நடிக்க கற்று
தரவேண்டும்.
நிழலுக்காக நான்
மரங்களின் ஓரங்களில்
ஒதுங்கிய போதெல்லாம்
பரிசாக கிடைத்ததோ
பறவையின் எச்சங்கள்.
இதோ இன்றும்
தனியாய் நடந்து
கொண்டே.............
நிலா
இரவென்னும் கவிஞன்
வான தாரகையின்
மேனியில் எழுதிய
கவிதைதான் நிலவோ!
வான மங்கையின்
கரிய கூந்தலில்
சூரிய காதலன்
சூடிய மலரோ!
மாதம் ஒருமுறை
மறைந்து போகும்
மழை துளியோ!
மொழிபிழையோ!
குளிரும் பந்தில்
ஒளிரும் மின்மினியை
ஒளித்து வைத்த
விந்தை தானோ!
மழலையென என்
மடியில் தவழும்
காதல் தேவதையின்
கனவு திலகமோ!
மேகப் போர்வைக்குள்
முகம் புதைத்து
நாணம் கொள்ளும்
ஞான விளக்கோ!
நீ ஓவியமோ
நிழல் காவியமோ
உயிர் தோரணமோ
உடல் தேன்மழையோ
சொல்லடி நிலவே
நீ யாரடி.
வான தாரகையின்
மேனியில் எழுதிய
கவிதைதான் நிலவோ!
வான மங்கையின்
கரிய கூந்தலில்
சூரிய காதலன்
சூடிய மலரோ!
மாதம் ஒருமுறை
மறைந்து போகும்
மழை துளியோ!
மொழிபிழையோ!
குளிரும் பந்தில்
ஒளிரும் மின்மினியை
ஒளித்து வைத்த
விந்தை தானோ!
மழலையென என்
மடியில் தவழும்
காதல் தேவதையின்
கனவு திலகமோ!
மேகப் போர்வைக்குள்
முகம் புதைத்து
நாணம் கொள்ளும்
ஞான விளக்கோ!
நீ ஓவியமோ
நிழல் காவியமோ
உயிர் தோரணமோ
உடல் தேன்மழையோ
சொல்லடி நிலவே
நீ யாரடி.
மழை பொழுதுகள்
மழை பொழியும்
மந்தார பொழுதுகளில்
நனைவது மண் மட்டுமல்ல.
மண்ணோடு மனமும் தான்.
தலைமீது குதித்து
துணிகளை நனைத்து
துள்ளி ஓடும்
மழைதுளிகள் காண்கையில்
பின்னால் இருந்து
கண்ணை மூடும்
பிள்ளைகளின் ஞாபகம்.
வானம் நோக்கிப்
பார்த்து வாய்
திறந்து மழைநீர்
பருகும் வேளைகளில்
அமுதம் உண்ட
அனுபவம்.
ஜன்னல் வழியே வரும்
சாரலில் ஆயிரம்
பூக்கள் தேனைத்
தெளிப்பது போலோர்
பிரமிப்பு.
போர்வைக்குள் முகம்
புதைத்து தூங்கினாலும்
தட்டி எழுப்பும்
இடி ஓலியில்
தாயின் அதட்டல்.
பட்டுபோன ரோஜாசெடி
மழை உண்டு மொட்டு
விடுகையில் நிறைவேறா
கனவுகள் நிகழ்ந்த
உணர்வு.
இரைச்சலோடு பெய்யும்
மழையின் ஓசையில்
தங்கைகள் வீட்டில்
அடிக்கும் அரட்டையின்
சாயல்.
இவை எல்லாம்
இதயத்தில் இன்றும்
இதமாய் இனிக்கிறது.
மந்தார பொழுதுகளில்
நனைவது மண் மட்டுமல்ல.
மண்ணோடு மனமும் தான்.
தலைமீது குதித்து
துணிகளை நனைத்து
துள்ளி ஓடும்
மழைதுளிகள் காண்கையில்
பின்னால் இருந்து
கண்ணை மூடும்
பிள்ளைகளின் ஞாபகம்.
வானம் நோக்கிப்
பார்த்து வாய்
திறந்து மழைநீர்
பருகும் வேளைகளில்
அமுதம் உண்ட
அனுபவம்.
ஜன்னல் வழியே வரும்
சாரலில் ஆயிரம்
பூக்கள் தேனைத்
தெளிப்பது போலோர்
பிரமிப்பு.
போர்வைக்குள் முகம்
புதைத்து தூங்கினாலும்
தட்டி எழுப்பும்
இடி ஓலியில்
தாயின் அதட்டல்.
பட்டுபோன ரோஜாசெடி
மழை உண்டு மொட்டு
விடுகையில் நிறைவேறா
கனவுகள் நிகழ்ந்த
உணர்வு.
இரைச்சலோடு பெய்யும்
மழையின் ஓசையில்
தங்கைகள் வீட்டில்
அடிக்கும் அரட்டையின்
சாயல்.
இவை எல்லாம்
இதயத்தில் இன்றும்
இதமாய் இனிக்கிறது.
Monday, June 16, 2008
காதல் சுவடுகள்
“சாமியை கும்பிட்டு போடா” என கூறிய தாயை ஏளனமாக பார்த்து கொண்டே பூஜை அறைக்கு சென்றான் மோகன்.
“நேரம் ஆச்சு. ரெடியா” அவன் அப்பா சங்கரின் குரலை கேட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம் பா”
என்றான்.
”முதல் நாள் காலேஜ் போற! சீக்கிரம் கிளம்புடா” என்றார் சங்கர்.
அவர் கண்களில் பெருமிதம். இருக்காதா பின்னே?
இத்தனை வருடங்களில் வயலில் இரவு பகல் பாராமல் உழைத்து தான் மகனை பொறியியல் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டார். மோகனும் படிப்பில் மிகவும் கேட்டி. நுழைவு தேர்வு பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால், தானே தெருவுக்கு தயார் செய்தான். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்ணும் பெற்றான். அவன் மதிப்பெண்ணுக்கு இலவசமாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது.
இதுவரை வந்தாயிற்று. எப்படியும் கல்லூரியும் நன்றாக முடித்து விட வேண்டும் என்பதில் வெறி அவனுக்கு.
”அம்மா!நான் வரேன்” என்று விடை கொடுத்து விட்டு கிளம்பினான்.
செருப்பு இல்லாமல் நடந்து வரும் தந்தையை கண்டு மௌனமாக
தன்னை நொந்து கொண்டே நடந்து வந்தான். அவனை கல்லூரியில் சேர்த்து ஆயிற்று.
”அப்பா. நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்” என ஆறுதல் கூறிவிட்டு தந்தையை வழி அனுப்பி வைத்தான்.
அவனை சுற்றி அழகாய் பல பெண்கள். ஆண்களின் வாசம் மட்டுமே அறிந்த அவனுக்கு இது புதியதாய் தோன்றியது.
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனுக்குள் அணிவகுத்தன. ஆசை,எதிர்பார்ப்பு,உற்சாகம் எல்லாம் ஒரு கலவையாகி ஒருவித உணர்வை அவன் அனுபவித்து இருந்தான்.
முதல் வகுப்பு. அனைவரும் அவரவரை அறிமுகம் செய்து கொள்ள தொடங்கினர். இப்போது மோகனின் தருணம்!
”ஐ ஆம் மோகன். மை ஃபாதர் இஸ் அ ஃபார்மர்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஒருசிலர் அவனை கேலியாக பார்த்தனர். அதை பற்றி எல்லாம் அவன் கவலை பட்டதாய் தெரியவில்லை.
மணிகள் நாட்கள் ஆங்கின. நாட்கள் மாதங்கள் ஆங்கின. மோகனுக்கு
பல நண்பர்கள் முளைத்து இருந்தார்கள்.
அதில் காவியாவும் ஒருவள். அவன் படிப்பு,யாரிடமும் பேசாத அவன் தன்மை, அவனுக்கு தெரிந்தததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் பண்பு என எல்லாவற்றிலுமே அவன் அவளை கவர்ந்து இருந்தான்.
முதலில் அவன் அவளிடம் பிடி கொடுத்து பேசவில்லை. பிறகு மெல்ல மெல்ல இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
”மோகன். நாளைக்கு என் பர்த்டே பார்ட்டி இருக்கு, மறக்காம வந்துடு” அன்பு கட்டளை இட்டு போனாள் காவ்யா.
”சரி. வரேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஹாஸ்டல் வார்டன் திட்டுவார்” என சொல்லிவிட்டு கிளம்பினான் மோகன்.
அவள் வீட்டுக்கு சின்ன பரிசு பொருள் ஒன்றை எடுத்து கொண்டு கிளம்பினான்.
முதன் முதலாய் அவள் வீட்டுக்கு செல்கிறான். அவளின் வீடு அவனுக்கு கொஞ்சம் பிரமிப்பையும் கொஞ்சம் பயத்தையும் கூட்டியது. அவளிடம் பரிசை கொடுத்து விட்டு வேகமாக திரும்பி விட்டான்
காலம் அவர்களை இறுதி ஆண்டிற்குள் நிறுத்தி இருந்தது. கல்லூரியே இவர்களை காதலர்க்ளாய் இணைத்து பேசி இருந்தது.
”மோகன். நாம் என் எதிர் காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் திருமணம் செஞ்சுக்க கூடாது?”
என இயல்பாக கேட்ட காவ்யாவை ஆவலோடு பார்த்தான் மோகன்.
”என்ன காவ்யா சொல்றே. நீ தொடுவானம். உன்னை என்னால் ரசிக்க முடியும். ஆனால் உரிமை கொண்டாட முடியாது” என சமாதான படுத்த முயன்றான்.
அவளோ தீர்க்கமாக சொன்னாள்.” நல்லா யோசி. நாம ஒண்ணும் இப்போ மெரேஜ் பண்ண போறது இல்லை. இன்னும் 3 டு 4 இயர்ஸ் இருக்கு.
நீயும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடுவே.
உன்னை என்கிட்டே இருந்து எதுவும் வித்தியாச படுத்தாது” நடை முறையை எடுத்து கூறினாள். அவனும் சரியேன ஒத்து கொண்டான்
நாட்கள் உருண்டு ஓடின. கடமையோடு அவன் காதலும் வளர்ந்து வந்தது.
அவன் கல்லூரி முடித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.
”அம்மா. இன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்தியை நம்ம வீட்டுக்கு கூட்டி வரட்டுமா” என கேட்டுவிட்டு தாயின் பதிலுக்கு காத்து இருந்தான்.
”ஏண்டா. இதை என்கிட்ட கேட்கிறே. கூட்டிட்டு வர வேண்டியது தானே” என்றாள் அவன் அம்மா.
அன்று புதியதாய் வர போகும் விருந்தாலிக்காக அவன் அப்பா,அம்மா,தங்கை என குடும்பமே காத்து இருந்தது. அவள் காரில் அவனுடன் வந்து இறங்கினாள்.
அவர்கள் வீட்டை பார்த்த உடனே முகம் சுழித்தாள். இதை அவர்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை, அவனையும் சேர்த்து. கலைந்த கேசம், அழுக்கு வேட்டி என அவன் தந்தை ஒரு விவசாயியை வார்த்து எடுத்து இருந்தார். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் வெறுப்பை ஊமிஜ்ந்டன. மோகன் நிகழ்வது அறியாமல் திகைத்தான்.
அவள் அவனை தனியே அழைத்தாள்
”மோகன். உங்க வீடும், உங்க வீட்டில இருக்கறவங்களும் இப்படி இருப்பாங்கணு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் நான் நேசித்தது உங்களை மட்டும் தான். நம்ம மெரேஜ் முடிஞ்ச்தும் நாம தனியா போயிடலாம். மாசா மாசம் ஒரு தொகையை உங்க வீட்டுக்கு கொடுத்தூடுங்க. இவங்க கூட என்னால வாழ முடியாது” என குமிறினாள் காவிய.
கை கழுவ வந்த சங்கர் நிலமையை ஓரளவுக்கு உக்கு கொண்டார். தன் மகன் என்ன சொல்ல போகிறான் என வியப்போடு நின்று இருந்தார்.
”இங்கே பார் காவியா. உன்னை எனக்கு ஏழு வருஷமா தான் தெரியும். ஆனா என் குடும்பத்தை 24 வருஷமா தெரியும். என்னை எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வாச்சார்னு தெரியுமா. நான் இஞ்சினியரிங் படிக்கறதுக்காக என் தங்கை +2 வோடு படிப்பை நிறுத்திக்கிட்டா. என் அம்மா தான் தாலியை அடக்கு வச்சு தான் என் ஃபைநல் இயர் எக்ஸ்யாம் பீஸ் கட்டுநாங்க. இன்னைக்கு நான் நல்ல நிலமையில் இருக்கேன் என்பதற்காக நான் அவங்களை கை விட முடியாது. உனக்கு என்னை மாதிரி, என் என்னை விட நல்லா நிறைய மாப்பிள்ளை கிடைப்பாங்க. ஆனா என் அப்பா அம்மாவிற்கு என்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க மாட்டாங்க. நீ என்னை மறந்துடு. நானும் மறந்துடறேன்” என கண் கலங்கியவாறே கூறி முடித்தான்.
இப்போது சங்கரின் கண்களும் நனைந்து இருந்தன.
காவியா ஓடி வந்து மோகனை இறுக்கி கட்டி கொண்டாள்.
”என்னை மன்னிச்சுடுங்க. இது நான் உங்களுக்கு வச்ச சிறு பரீட்சை தான் .நீங்க விண் பன்னீட்டீங்க மோகன். உங்களை கணவானாய் அடைய நான் கொடுத்து வச்சு இருக்கணும். எப்போதுமே மாறாமா இருக்கற உங்க பாசம் போலதான் உங்க காதலும் என்னைக்கும் மாறாது” என கூறிக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
ஒரு நொடியில் எல்லாம் முடிந்து விட்டதாய் எண்ணிய மோகன் அவளை நிமிர்த்தி ”அழாதேடி. எல்லா ஜென்மத்த்திலும் நான் தான் உன் புருஷன்”என சொல்லி மெல்லிய முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.
அவன் குடும்பமே ஆனந்த களிப்பில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் நிற்பதை பார்த்த காவ்யா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.
அவர்களின் காதலின் சுவடுகள் மெதுவாய் எல்லோர் இதயத்திலும் பதிய தொடங்கி இருந்தன
“நேரம் ஆச்சு. ரெடியா” அவன் அப்பா சங்கரின் குரலை கேட்டு, “இன்னும் அஞ்சு நிமிஷம் பா”
என்றான்.
”முதல் நாள் காலேஜ் போற! சீக்கிரம் கிளம்புடா” என்றார் சங்கர்.
அவர் கண்களில் பெருமிதம். இருக்காதா பின்னே?
இத்தனை வருடங்களில் வயலில் இரவு பகல் பாராமல் உழைத்து தான் மகனை பொறியியல் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டார். மோகனும் படிப்பில் மிகவும் கேட்டி. நுழைவு தேர்வு பயிற்சிக்கு செல்ல பணம் இல்லாததால், தானே தெருவுக்கு தயார் செய்தான். ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்ணும் பெற்றான். அவன் மதிப்பெண்ணுக்கு இலவசமாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது.
இதுவரை வந்தாயிற்று. எப்படியும் கல்லூரியும் நன்றாக முடித்து விட வேண்டும் என்பதில் வெறி அவனுக்கு.
”அம்மா!நான் வரேன்” என்று விடை கொடுத்து விட்டு கிளம்பினான்.
செருப்பு இல்லாமல் நடந்து வரும் தந்தையை கண்டு மௌனமாக
தன்னை நொந்து கொண்டே நடந்து வந்தான். அவனை கல்லூரியில் சேர்த்து ஆயிற்று.
”அப்பா. நீ கிளம்பு. நான் பார்த்துக்குறேன்” என ஆறுதல் கூறிவிட்டு தந்தையை வழி அனுப்பி வைத்தான்.
அவனை சுற்றி அழகாய் பல பெண்கள். ஆண்களின் வாசம் மட்டுமே அறிந்த அவனுக்கு இது புதியதாய் தோன்றியது.
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனுக்குள் அணிவகுத்தன. ஆசை,எதிர்பார்ப்பு,உற்சாகம் எல்லாம் ஒரு கலவையாகி ஒருவித உணர்வை அவன் அனுபவித்து இருந்தான்.
முதல் வகுப்பு. அனைவரும் அவரவரை அறிமுகம் செய்து கொள்ள தொடங்கினர். இப்போது மோகனின் தருணம்!
”ஐ ஆம் மோகன். மை ஃபாதர் இஸ் அ ஃபார்மர்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஒருசிலர் அவனை கேலியாக பார்த்தனர். அதை பற்றி எல்லாம் அவன் கவலை பட்டதாய் தெரியவில்லை.
மணிகள் நாட்கள் ஆங்கின. நாட்கள் மாதங்கள் ஆங்கின. மோகனுக்கு
பல நண்பர்கள் முளைத்து இருந்தார்கள்.
அதில் காவியாவும் ஒருவள். அவன் படிப்பு,யாரிடமும் பேசாத அவன் தன்மை, அவனுக்கு தெரிந்தததை மற்றவருக்கு சொல்லி கொடுக்கும் பண்பு என எல்லாவற்றிலுமே அவன் அவளை கவர்ந்து இருந்தான்.
முதலில் அவன் அவளிடம் பிடி கொடுத்து பேசவில்லை. பிறகு மெல்ல மெல்ல இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.
”மோகன். நாளைக்கு என் பர்த்டே பார்ட்டி இருக்கு, மறக்காம வந்துடு” அன்பு கட்டளை இட்டு போனாள் காவ்யா.
”சரி. வரேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. ஹாஸ்டல் வார்டன் திட்டுவார்” என சொல்லிவிட்டு கிளம்பினான் மோகன்.
அவள் வீட்டுக்கு சின்ன பரிசு பொருள் ஒன்றை எடுத்து கொண்டு கிளம்பினான்.
முதன் முதலாய் அவள் வீட்டுக்கு செல்கிறான். அவளின் வீடு அவனுக்கு கொஞ்சம் பிரமிப்பையும் கொஞ்சம் பயத்தையும் கூட்டியது. அவளிடம் பரிசை கொடுத்து விட்டு வேகமாக திரும்பி விட்டான்
காலம் அவர்களை இறுதி ஆண்டிற்குள் நிறுத்தி இருந்தது. கல்லூரியே இவர்களை காதலர்க்ளாய் இணைத்து பேசி இருந்தது.
”மோகன். நாம் என் எதிர் காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் திருமணம் செஞ்சுக்க கூடாது?”
என இயல்பாக கேட்ட காவ்யாவை ஆவலோடு பார்த்தான் மோகன்.
”என்ன காவ்யா சொல்றே. நீ தொடுவானம். உன்னை என்னால் ரசிக்க முடியும். ஆனால் உரிமை கொண்டாட முடியாது” என சமாதான படுத்த முயன்றான்.
அவளோ தீர்க்கமாக சொன்னாள்.” நல்லா யோசி. நாம ஒண்ணும் இப்போ மெரேஜ் பண்ண போறது இல்லை. இன்னும் 3 டு 4 இயர்ஸ் இருக்கு.
நீயும் ஒரு நல்ல நிலமைக்கு வந்துடுவே.
உன்னை என்கிட்டே இருந்து எதுவும் வித்தியாச படுத்தாது” நடை முறையை எடுத்து கூறினாள். அவனும் சரியேன ஒத்து கொண்டான்
நாட்கள் உருண்டு ஓடின. கடமையோடு அவன் காதலும் வளர்ந்து வந்தது.
அவன் கல்லூரி முடித்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன.
”அம்மா. இன்னைக்கு என் ப்ரெண்ட் ஒருத்தியை நம்ம வீட்டுக்கு கூட்டி வரட்டுமா” என கேட்டுவிட்டு தாயின் பதிலுக்கு காத்து இருந்தான்.
”ஏண்டா. இதை என்கிட்ட கேட்கிறே. கூட்டிட்டு வர வேண்டியது தானே” என்றாள் அவன் அம்மா.
அன்று புதியதாய் வர போகும் விருந்தாலிக்காக அவன் அப்பா,அம்மா,தங்கை என குடும்பமே காத்து இருந்தது. அவள் காரில் அவனுடன் வந்து இறங்கினாள்.
அவர்கள் வீட்டை பார்த்த உடனே முகம் சுழித்தாள். இதை அவர்கள் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை, அவனையும் சேர்த்து. கலைந்த கேசம், அழுக்கு வேட்டி என அவன் தந்தை ஒரு விவசாயியை வார்த்து எடுத்து இருந்தார். அவளுடைய ஒவ்வொரு செய்கையும் வெறுப்பை ஊமிஜ்ந்டன. மோகன் நிகழ்வது அறியாமல் திகைத்தான்.
அவள் அவனை தனியே அழைத்தாள்
”மோகன். உங்க வீடும், உங்க வீட்டில இருக்கறவங்களும் இப்படி இருப்பாங்கணு நான் நினைக்கவே இல்லை. இருந்தாலும் நான் நேசித்தது உங்களை மட்டும் தான். நம்ம மெரேஜ் முடிஞ்ச்தும் நாம தனியா போயிடலாம். மாசா மாசம் ஒரு தொகையை உங்க வீட்டுக்கு கொடுத்தூடுங்க. இவங்க கூட என்னால வாழ முடியாது” என குமிறினாள் காவிய.
கை கழுவ வந்த சங்கர் நிலமையை ஓரளவுக்கு உக்கு கொண்டார். தன் மகன் என்ன சொல்ல போகிறான் என வியப்போடு நின்று இருந்தார்.
”இங்கே பார் காவியா. உன்னை எனக்கு ஏழு வருஷமா தான் தெரியும். ஆனா என் குடும்பத்தை 24 வருஷமா தெரியும். என்னை எங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வாச்சார்னு தெரியுமா. நான் இஞ்சினியரிங் படிக்கறதுக்காக என் தங்கை +2 வோடு படிப்பை நிறுத்திக்கிட்டா. என் அம்மா தான் தாலியை அடக்கு வச்சு தான் என் ஃபைநல் இயர் எக்ஸ்யாம் பீஸ் கட்டுநாங்க. இன்னைக்கு நான் நல்ல நிலமையில் இருக்கேன் என்பதற்காக நான் அவங்களை கை விட முடியாது. உனக்கு என்னை மாதிரி, என் என்னை விட நல்லா நிறைய மாப்பிள்ளை கிடைப்பாங்க. ஆனா என் அப்பா அம்மாவிற்கு என்னை மாதிரி ஒரு மகன் கிடைக்க மாட்டாங்க. நீ என்னை மறந்துடு. நானும் மறந்துடறேன்” என கண் கலங்கியவாறே கூறி முடித்தான்.
இப்போது சங்கரின் கண்களும் நனைந்து இருந்தன.
காவியா ஓடி வந்து மோகனை இறுக்கி கட்டி கொண்டாள்.
”என்னை மன்னிச்சுடுங்க. இது நான் உங்களுக்கு வச்ச சிறு பரீட்சை தான் .நீங்க விண் பன்னீட்டீங்க மோகன். உங்களை கணவானாய் அடைய நான் கொடுத்து வச்சு இருக்கணும். எப்போதுமே மாறாமா இருக்கற உங்க பாசம் போலதான் உங்க காதலும் என்னைக்கும் மாறாது” என கூறிக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
ஒரு நொடியில் எல்லாம் முடிந்து விட்டதாய் எண்ணிய மோகன் அவளை நிமிர்த்தி ”அழாதேடி. எல்லா ஜென்மத்த்திலும் நான் தான் உன் புருஷன்”என சொல்லி மெல்லிய முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான்.
அவன் குடும்பமே ஆனந்த களிப்பில் நின்று கொண்டு இருந்தது. அவர்கள் நிற்பதை பார்த்த காவ்யா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றாள்.
அவர்களின் காதலின் சுவடுகள் மெதுவாய் எல்லோர் இதயத்திலும் பதிய தொடங்கி இருந்தன
Wednesday, June 11, 2008
கவிதை சிறகுகள்
************************************************************************
என்னோடு பேசாமல் நீ
செல்லும்போதும்,
என்னோடு பேசி
கொண்டே இருக்கும்
உன் காலின்
கொலுஸுகளை
விரும்புகிறேன்.
************************************************************************
உன் மீது
நான் கொண்ட
காதலை
ஒரு குழந்தையை
போல வளர்க்கிறேன்.
கொஞ்சம் திட்டி
குட்டி கொஞ்சி
கெஞ்சி அணைத்து.
***********************************************************************
என்னை தொடும்
முன்வரை தென்றளாக
இருந்த நீ,
என்னை தீண்டும்
போது மட்டும்
ஏன் புயலாக
மாறுகிறாய்.
************************************************************************
நீ நடந்து
போகும் போது
என் நிழல் கூட
உன்னை திரும்பி
பார்க்கும்
************************************************************************
என் கடைசி
கனவு நினவில்
இல்லை.
ஆனால் என்
முதல் நினைவு
நீ தான்.
***********************************************************************
உன் பார்வையில்
நனையும் சுகம்
இந்த மழையில்
நானைவதில்
இல்லை.
************************************************************************
என் கவிதைகள்
உன்னை வந்து
சேராவிட்டால்
உன்னை மறந்து
விட்டேன் என
நினைத்து கொள்ளாதே!
இறந்து விட்டேன்
என புரிந்து
கொள்.
************************************************************************
மழை காலத்தில்
கூட உன்
இமை குடையின்
கீழ் வாழ்வது
தான் பிடிக்கும்.
************************************************************************
எனக்கும்
உன் காலின்
கொலுஸுக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை.
இரண்டு பெறுமே
உன் காலை
தான் சுற்றுகிறோம்.
************************************************************************
என்னோடு பேசாமல் நீ
செல்லும்போதும்,
என்னோடு பேசி
கொண்டே இருக்கும்
உன் காலின்
கொலுஸுகளை
விரும்புகிறேன்.
************************************************************************
உன் மீது
நான் கொண்ட
காதலை
ஒரு குழந்தையை
போல வளர்க்கிறேன்.
கொஞ்சம் திட்டி
குட்டி கொஞ்சி
கெஞ்சி அணைத்து.
***********************************************************************
என்னை தொடும்
முன்வரை தென்றளாக
இருந்த நீ,
என்னை தீண்டும்
போது மட்டும்
ஏன் புயலாக
மாறுகிறாய்.
************************************************************************
நீ நடந்து
போகும் போது
என் நிழல் கூட
உன்னை திரும்பி
பார்க்கும்
************************************************************************
என் கடைசி
கனவு நினவில்
இல்லை.
ஆனால் என்
முதல் நினைவு
நீ தான்.
***********************************************************************
உன் பார்வையில்
நனையும் சுகம்
இந்த மழையில்
நானைவதில்
இல்லை.
************************************************************************
என் கவிதைகள்
உன்னை வந்து
சேராவிட்டால்
உன்னை மறந்து
விட்டேன் என
நினைத்து கொள்ளாதே!
இறந்து விட்டேன்
என புரிந்து
கொள்.
************************************************************************
மழை காலத்தில்
கூட உன்
இமை குடையின்
கீழ் வாழ்வது
தான் பிடிக்கும்.
************************************************************************
எனக்கும்
உன் காலின்
கொலுஸுக்கும்
பெரிதாய் ஒன்றும்
வித்தியாசம் இல்லை.
இரண்டு பெறுமே
உன் காலை
தான் சுற்றுகிறோம்.
************************************************************************
வந்துவிடு
எச்சில் முத்தம் பிச்சையாய் இட்டு
என் இதய பாத்திரத்தை நிரப்பிவிடு.
இச்சை தீர என்னை நேசித்து
இதழ்கலாள் இதயத்தை ஈரப்படுத்து.
உறக்கம் இன்றி உதிர்ந்த இரவுகளை
சேகரித்து என்னிடம் சேர்க்க வந்துவிடு
கண்ணீரால் குளித்த என் விழிகளை
உன் புன்னகையால் துவட்டி தந்துவிடு.
உன் இமைகளை என் கண்களாய்
இடம் பெயர்த்து இரவுகளை நீள விடு.
திசுக்களை எல்லாம் பொசுக்கி என்
நாடி நரம்புகளில் தாளமிடு.
பார்வையின் பதிப்பில் வார்த்தைகள்
மரணித்துதால் மௌனத்தால் பேசிவிடு.
நாணம் கொண்டு நிலம் நோக்கையில்
உன் கூந்தல் வாசம் வீசிவிடு.
விடுமுறை தினங்களில் உன் சிகைதனை
சீவி விடும் சிற்றின்பம் தந்துவிடு.
சோகத்தில் நான் வேகும் காலத்தில்
உன் மென்கரத்தால் என்னை தாங்கி விடு.
உன் நிழல் எப்போதும் என்மீது
விழுந்து கிடந்து வாழட்டும்.
உன்னை பிரிந்து ஒருநாள் இருந்தாலும்
உயிர் ரணமாகி சாகட்டும்.
உன் ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம்
சொல்லி கொடுத்து அகராதி எழுதவிடு.
ஒரு சிசுவாய் என்னை நெஞ்சொடு வாரி
அணைத்து கேட்காத தாலாட்டை கேட்க விடு.
அறுபது வயது ஆனாலும் உன்
அருகாமையில் என்னை நனைத்து விடு.
அன்பே நான் பிரிய நேர்ந்தாலும்
ஒரேஒரு கணம் என்னை நினைத்துவிடு.
வள்ளுவம் கூறிய இல்லறம் நாம்
வையத்தில் புரியும் வரம் வேண்டும்.
மனிதராய் பிறந்த அன்றில் நாம்
என்று அகிலம் அறிய வேண்டும்.
என் இதய பாத்திரத்தை நிரப்பிவிடு.
இச்சை தீர என்னை நேசித்து
இதழ்கலாள் இதயத்தை ஈரப்படுத்து.
உறக்கம் இன்றி உதிர்ந்த இரவுகளை
சேகரித்து என்னிடம் சேர்க்க வந்துவிடு
கண்ணீரால் குளித்த என் விழிகளை
உன் புன்னகையால் துவட்டி தந்துவிடு.
உன் இமைகளை என் கண்களாய்
இடம் பெயர்த்து இரவுகளை நீள விடு.
திசுக்களை எல்லாம் பொசுக்கி என்
நாடி நரம்புகளில் தாளமிடு.
பார்வையின் பதிப்பில் வார்த்தைகள்
மரணித்துதால் மௌனத்தால் பேசிவிடு.
நாணம் கொண்டு நிலம் நோக்கையில்
உன் கூந்தல் வாசம் வீசிவிடு.
விடுமுறை தினங்களில் உன் சிகைதனை
சீவி விடும் சிற்றின்பம் தந்துவிடு.
சோகத்தில் நான் வேகும் காலத்தில்
உன் மென்கரத்தால் என்னை தாங்கி விடு.
உன் நிழல் எப்போதும் என்மீது
விழுந்து கிடந்து வாழட்டும்.
உன்னை பிரிந்து ஒருநாள் இருந்தாலும்
உயிர் ரணமாகி சாகட்டும்.
உன் ஒவ்வொரு பார்வைக்கும் அர்த்தம்
சொல்லி கொடுத்து அகராதி எழுதவிடு.
ஒரு சிசுவாய் என்னை நெஞ்சொடு வாரி
அணைத்து கேட்காத தாலாட்டை கேட்க விடு.
அறுபது வயது ஆனாலும் உன்
அருகாமையில் என்னை நனைத்து விடு.
அன்பே நான் பிரிய நேர்ந்தாலும்
ஒரேஒரு கணம் என்னை நினைத்துவிடு.
வள்ளுவம் கூறிய இல்லறம் நாம்
வையத்தில் புரியும் வரம் வேண்டும்.
மனிதராய் பிறந்த அன்றில் நாம்
என்று அகிலம் அறிய வேண்டும்.
அன்பு தலைக்கு அர்ப்பணம்
தன்னம்பிக்கை
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.
ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்
அதனால் தான்
நீ தலை.
உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.
நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.
சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.
துடிப்பு ஆனா நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடி ப்பாய்
கொண்டாய்.
நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.
உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.
நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.
நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.
யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.
ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.
நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.
உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.
நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படை யிலும்
சிறந்தாய்.
வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.
நீ துவண்டு
விடாத வீர
களிறு.
வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தளபதிகள்
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.
ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்
அதனால் தான்
நீ தலை.
உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.
நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.
சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.
துடிப்பு ஆனா நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடி ப்பாய்
கொண்டாய்.
நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.
உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.
நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.
நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.
யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.
ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.
நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.
உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.
நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படை யிலும்
சிறந்தாய்.
வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.
நீ துவண்டு
விடாத வீர
களிறு.
வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தளபதிகள்
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!
சூரிய சிசு
நிசப்தமாய்
நிகழ்கிறது
ஒரு பிரசவம்.
வான கருவறைக்குள்
இருந்து மெல்ல
எட் டி பார்க்கிறான்
சூரிய சிசு.
கொஞ்சம் கொஞ்சமாய்
கண் விழித்து
கடல் நீரில்
தன் முகத்தை
பார்த்து சிரிக்கிறான்.
நெடு நாளைய
நண்பனை கண்டது
போல் புன்னகைக்கின்றன
பூக்கள்.
பூமியில் அழகு
என சொல்லப்படும்
அனைத்தையுமே கதிர்களால்
அனைத்து கொள்கிறான்
ஆதவன்.
வெளிச்சம் புக
முடியாத
மாயிருள் வானத்தில்
கூட தன்னை
நுழைத்து
சிரிக்கிறான் ஞாயிறு.
ஓங்கி வளர்ந்த
மரங்களின் முதுகில்
ஏறி ஒய்யாரமாய்
ஊர்வலம் வருகிறான்.
வெள்ளியாய் இருக்கும்
ஆற்று நீரினை
தொட்டு தங்கமாய்
மாற்றி விளையாடி
போகிறான்.
ஓரிடத்தில் நிற்காமல்
கிழக்கும் மேற்குமாய்
ஓடி கொண்டே
இருக்கிறான்.
அவன் இருத்தலின்
பிரதிபலிப்பு.
உயிருள்ள பொருள்களின்
பிரதிநிதி.
வெளிச்ச மலர்கள்
மொட்டு அவிழ்க்கும்
தோட்டம்.
கனல் குழந்தைகள்
கை கோர்த்து
விளையாடும்
பூங்கா.
வெண்ணிலா அவனை
கண்டு காதலில்
வெட்க படுகிறாள்!
வானமே சிவந்து
கிடக்கிறது.
அவள் முகம்
காண வெட்கப்பட்டு
மெல்ல மேகத்திற்குள்
முகம் புதைக்கிறான்.
முதலவன்.
தன் மரணம்
தான் இதுவென
தெரியாமலேயே!
பிரசவம் மட்டும்
அல்ல! அவன்
மரணம் கூட
நிசப்தமாய் தான்
நிகழ்கிறது.
நிகழ்கிறது
ஒரு பிரசவம்.
வான கருவறைக்குள்
இருந்து மெல்ல
எட் டி பார்க்கிறான்
சூரிய சிசு.
கொஞ்சம் கொஞ்சமாய்
கண் விழித்து
கடல் நீரில்
தன் முகத்தை
பார்த்து சிரிக்கிறான்.
நெடு நாளைய
நண்பனை கண்டது
போல் புன்னகைக்கின்றன
பூக்கள்.
பூமியில் அழகு
என சொல்லப்படும்
அனைத்தையுமே கதிர்களால்
அனைத்து கொள்கிறான்
ஆதவன்.
வெளிச்சம் புக
முடியாத
மாயிருள் வானத்தில்
கூட தன்னை
நுழைத்து
சிரிக்கிறான் ஞாயிறு.
ஓங்கி வளர்ந்த
மரங்களின் முதுகில்
ஏறி ஒய்யாரமாய்
ஊர்வலம் வருகிறான்.
வெள்ளியாய் இருக்கும்
ஆற்று நீரினை
தொட்டு தங்கமாய்
மாற்றி விளையாடி
போகிறான்.
ஓரிடத்தில் நிற்காமல்
கிழக்கும் மேற்குமாய்
ஓடி கொண்டே
இருக்கிறான்.
அவன் இருத்தலின்
பிரதிபலிப்பு.
உயிருள்ள பொருள்களின்
பிரதிநிதி.
வெளிச்ச மலர்கள்
மொட்டு அவிழ்க்கும்
தோட்டம்.
கனல் குழந்தைகள்
கை கோர்த்து
விளையாடும்
பூங்கா.
வெண்ணிலா அவனை
கண்டு காதலில்
வெட்க படுகிறாள்!
வானமே சிவந்து
கிடக்கிறது.
அவள் முகம்
காண வெட்கப்பட்டு
மெல்ல மேகத்திற்குள்
முகம் புதைக்கிறான்.
முதலவன்.
தன் மரணம்
தான் இதுவென
தெரியாமலேயே!
பிரசவம் மட்டும்
அல்ல! அவன்
மரணம் கூட
நிசப்தமாய் தான்
நிகழ்கிறது.
சேமிப்பு
நீ உடன்
இருக்கும் போதே
புன்னகைத்து
கொள்கிறேன்.
நீ என்னை
நீங்கிய பின்பு
புன்னகைக்க
காரணம்
இருக்காது!
இப்போதாவது
புரிகிறதா?
அது என் தாய்மொழி
அல்ல.
உன் அருகாமையின்
சேமிப்பு என்று!
இருக்கும் போதே
புன்னகைத்து
கொள்கிறேன்.
நீ என்னை
நீங்கிய பின்பு
புன்னகைக்க
காரணம்
இருக்காது!
இப்போதாவது
புரிகிறதா?
அது என் தாய்மொழி
அல்ல.
உன் அருகாமையின்
சேமிப்பு என்று!
Monday, June 09, 2008
உயிர் தோழி
ஏதோ ஒரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
நானும் என்
உயிர் தோழியும்.
கணவன் அருகே
கையில் ஒன்றும்
கணவனிடம் ஒன்றுமாய்
மழலை பூக்கள்.
கொஞ்ச நேர மென
கணவன் காது
கடித்து கண்முன்
உதிக்கிறாள்
உயிர் தோழி.
”வகுப்பறை வாசல்
மரத்தடி நிழல்
நூலக பாதை
பக்க சுவர்
திரையரங்கு காட்சி
பேருந்து பயணம்
நண்பர் வீடுகள்
கல்லூரி சாலைகள்
தேர்வு கூடம்
பேருந்து நிறுத்தம்”
என பழைய
நினைவுகளில்
பாதி நேரம்
பார்த்து கொண்டே
கழிய,
ஊமையாய் நிற்கிறாள்
உயிரில் வாழும்
உன்னத தோழி.
”எப்படி இருக்கே”
என நான் கேட்டு
முடிப்பதற்குள்
”நேரமாச்சு” என
கணவன் குரல்
வந்த திசை
நோக்கி எதுவும்
சொல்லாமலே
நகர்கிறாள்
என் வினாவின்
விடை அவள்
போகும் பாதையில்
புல படுகிறது.
”நலமாய் இருக்கிறாள்”
அவள் என்று.
கண்கள் நீரை
நிறுத்தி விட்டு
உதடுகள் பூக்க
தொடங்குகின்றன.
ஏதோவொரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
மீண்டும் சந்திப்போம்
என்ற நம்பிக்கையோடு.
எதிரெதிர் திசையில்
நானும் என்
உயிர் தோழியும்.
கணவன் அருகே
கையில் ஒன்றும்
கணவனிடம் ஒன்றுமாய்
மழலை பூக்கள்.
கொஞ்ச நேர மென
கணவன் காது
கடித்து கண்முன்
உதிக்கிறாள்
உயிர் தோழி.
”வகுப்பறை வாசல்
மரத்தடி நிழல்
நூலக பாதை
பக்க சுவர்
திரையரங்கு காட்சி
பேருந்து பயணம்
நண்பர் வீடுகள்
கல்லூரி சாலைகள்
தேர்வு கூடம்
பேருந்து நிறுத்தம்”
என பழைய
நினைவுகளில்
பாதி நேரம்
பார்த்து கொண்டே
கழிய,
ஊமையாய் நிற்கிறாள்
உயிரில் வாழும்
உன்னத தோழி.
”எப்படி இருக்கே”
என நான் கேட்டு
முடிப்பதற்குள்
”நேரமாச்சு” என
கணவன் குரல்
வந்த திசை
நோக்கி எதுவும்
சொல்லாமலே
நகர்கிறாள்
என் வினாவின்
விடை அவள்
போகும் பாதையில்
புல படுகிறது.
”நலமாய் இருக்கிறாள்”
அவள் என்று.
கண்கள் நீரை
நிறுத்தி விட்டு
உதடுகள் பூக்க
தொடங்குகின்றன.
ஏதோவொரு பயணத்தில்
எதிரெதிர் திசையில்
மீண்டும் சந்திப்போம்
என்ற நம்பிக்கையோடு.
Subscribe to:
Posts (Atom)